மலத்தை வெளியேற்ற கடிமான இருக்கா? இறுகி காய்ந்த மலம் இளகி வர கொட்டைப்பாக்கை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Photo of author

By Divya

மலத்தை வெளியேற்ற கடிமான இருக்கா? இறுகி காய்ந்த மலம் இளகி வர கொட்டைப்பாக்கை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Divya


இந்த காலத்தில் பெரியவர்,சிறியவர் என்று பாரபட்சம் இன்றி அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனையாக மலச்சிக்கல் உள்ளது.மோசமான உணவுகள் செரிக்காமல் போவதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது.

பெருங்கடலில் உள்ள கழிவுகளை அகற்றாமல்விட்டால் உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.தினமும் காலை நேரத்தில் நிச்சயம் மலத்தை வெளியேற்றினால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.ஆனால் சிலர் இரண்டு மூன்று தினங்கள் கூட மலத்தை வெளியற்றாமல் இருப்பார்கள்.சிலர் வாரக் கணக்கில் மலத்தை வெளியேற்றாமல் இருக்கிறார்கள்.இதற்கு காரணம் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடு தான்.குடலில் அதிகப்படியான கழிவுகள் தேங்கி இருந்தால் அதை கொட்டைப்பாக்கு பானம் குடித்து வெளியேற்றிவிடலாம்.

தேவையான பொருட்கள்:-

1)கொட்டைப் பாக்கு – ஒன்று
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

ஒரு கிண்ணத்தில் வெது வெதுப்பான தண்ணீர் 150 மில்லி ஊற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு கொட்டைப்பாக்கை உரலில் போட்டு இடித்து அந்த தண்ணீரில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஊறவைக்க வேண்டும்.

பின்னர் இந்த நீரை அடுப்பில் வைத்து சிறிது சூடுபடுத்தி வடித்து குடித்து வந்தால் இறுகி கெட்டியான மலக் கழிவுகள் உடனடியாக வெளியேறும்.

கொட்டைப்பாக்கை பொடித்து நீரில் கலந்து குடித்து வந்தால் பெண்களின் கருப்பை சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.இரத்த சர்க்கரை அளவு உயர்ந்தவர்கள் கொட்டைப்பாக்கு தேநீர் செய்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க கொட்டைப்பாக்கு பானம் செய்து குடிக்கலாம்.வெற்றிலையில் கொட்டைப்பாக்கு வைத்து சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

கொட்டைப்பாக்குடன் சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வனத்தில் தைராய்டு பாதிப்பு குணமாகும்.