Breaking News, National, News

உங்க பேங்க் அக்கவுண்ட்ல பணம் பிடித்தம் செய்யப்படுகிறதா!! இத செஞ்சா இனி அந்த பிரச்சனையே இருக்காது!!

Photo of author

By Gayathri

பலருக்கு வங்கி கணக்குகளை ஏன் திறந்தோம் என்பது போல தோன்றக்கூடிய சூழ்நிலை ஆனது உருவாக்கி வருகிறது. காரணம் மினிமம் பேலன்ஸ் அக்கவுண்டுகளை திறப்பதன் மூலம் அந்த அக்கவுண்டுகளில் மினிமம் பேலன்ஸ் மெயின்டைன்ஸ் செய்யப்பட்டாலும் மெசேஜ்க்கான பணம், ஏடிஎம் சேவைகளுக்கான பணம், பேலன்ஸ் என்கொயரிக்கான பணம் என பிடித்தம் செய்யப்படுகிறது. அதன்பின் மினிமம் பேலன்ஸ் குறைவதால் அதற்கு ஒருமுறை பணம் பிடித்தம் என அக்கவுண்ட் முழுவதுமாக காலியாவதோடு மட்டுமல்லாது அக்கவுண்ட் மைனஸில் செல்வதும் வழக்கமாக நடைபெறுகிறது. 

 

இது போன்ற சிக்கல்களில் இருந்து தப்பிக்க கீழே குறிப்பிடும் வழிமுறைகளை பின்பற்றினால் போதும். இந்த வழிமுறைகள் குறிப்பாக கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவ மாணவியர் மற்றும் குறைவான வங்கி தேவைகளை விரும்பக் கூடியவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். இப்பொழுது வீட்டில் இருந்தபடியே 5 நிமிடத்தில் நம்மால் வங்கி கணக்கு திறக்க முடிகிறது அப்படி திறக்கப்படக்கூடிய வங்கி கணக்கானது ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஆக இருத்தல் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த அக்கவுண்ட் பலருக்கும் மிக அத்தியாவசிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.

 

ஏனெனில், ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டில் நாம் எந்த விதமான மெயின்டனன்ஸ் தொகையையும் செலுத்த வேண்டியது இருக்காது. எப்பொழுதாவது ஒருமுறை வங்கி கணக்கை பயன்படுத்தக் கூடியவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். சேமிப்பு கணக்காக இருக்கக்கூடிய ஜீரோ பேலன்ஸ் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்க வேண்டிய தேவை இல்லை என்பதால் இது மாதம் சம்பளம் வாங்கக்கூடிய அவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் திறக்க நினைப்பவர்கள் அதற்கான வங்கியை தேர்வு செய்த பின் அந்த வங்கிக்கான கணக்கை வீட்டில் இருந்தபடியே நம்மால் ஐந்து நிமிடங்களில் திறந்து கொள்ள முடியும். இன்னும் சில வங்கிகள் நேரடியாக வீட்டிற்கு ஊழியர்களை அனுப்பி நமக்கு தேவையான ஸிரோ பேலன்ஸ் அக்கவுண்டுகளை திறப்பதற்கு உதவி செய்கின்றன.

சச்சினை தொடர்ந்து அந்த 2 படங்கள் ரீ-ரிலீஸ்!. ஒரு முடிவோடதான் இருக்காங்க!…

பட்டா வாங்குவதற்கு முன் இந்த விவரங்களை அறிந்திருத்தல் அவசியம்!! உடனடியாக கவனிக்க வேண்டியவை!!