உங்கள் வீட்டில் கொசு தொல்லையா? இதனை மட்டும் செய்து பாருங்கள்!

0
125

உங்கள் வீட்டில் கொசு தொல்லையா? இதனை மட்டும் செய்து பாருங்கள்!

 

தற்போது மழை அதிகரித்து வருவதால் வீட்டில் கொசு தொல்லை அதிகமாக காணப்படும். கொசு அதிகரிப்பதன் மூலம் குழந்தைகள் உடல் நலக்குறைவால் பாதிப்படைகின்றனர். கொசுவை ஒழிப்பதற்காக நாம் ராசயின  முறையில் உருவான திரவத்தை பயன்படுத்துவதனால் உடல் பாதிப்பு ஏற்படுகின்றது அதனால் இயற்கை முறையில் கொசு விரட்டியை உருவாக்கும் முறையை  இந்த பதிவின் மூலம் காணலாம்.

முதலில் வேப்பிலையை பறித்து இரண்டு அல்லது  மூன்று நாட்கள் நன்றாக காய வைக்க வேண்டும். அதன் பிறகு அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து பவுடர் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு பூண்டு தோலை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு 10 அல்லது 20 கற்பூரம் மற்றும் நறுமணத்திற்காக பயன்படுத்தப்படும் சாமராண்டி கட்டியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதன் இரண்டையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும். அதனை அடுத்து இதனுடன் சிறிதளவு ஜவ்வாது நறுமணத்திற்காக சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அரைத்து பொடி செய்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அதனை உருட்டி நமக்கு தேவை ஏற்ப வடிவம் கொடுத்துக் கொள்ளலாம். அதன் பிறகு எடுத்து வைத்துள்ளதை ஒரு நாள் முழுவதும் வெயிலில் காய வைக்க வேண்டும். அதன் பிறகு காய வைத்துள்ள அந்த கலவையை ஒரு அகல் விளக்கில் வைத்து அதன் மேல் ஒரு சூடம் வைத்து பற்ற வைக்க வேண்டும். அதன் பிறகு அதிலிருந்து வரும் புகையின் மூலம் வீட்டில் உள்ள கொசுக்கள் பறந்து ஓடும்.

author avatar
Parthipan K