நிர்வாணமாக எடுக்கப்பட்ட விழிப்புணர்வு புகைப்படம்.! இணையத்தில் வைரல்.!!

0
78

புகைப்படக் கலைஞர் ஒருவர் 200 பேரை வைத்து நிர்வாணமாக புகைப்படம் எடுத்ததற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் நாடுகளுக்கு இதையே சாக்கடல் அமைந்துள்ளது. இதற்கு உப்புக்கடல் என்ற பெயரும் உண்டு. தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் இதன் அளவில் சுருங்கி விட்டது. மேலும், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வித்தியாசமாக புகைப்படத்தை அமெரிக்காவை சேர்ந்த ஸ்பென்சர் ட்யூநிக் என்பவர் எடுத்துள்ளார்.

இதில், அவர் சுமார் 200 ஆண்கள் மற்றும் 200 பெண்களை ஆடையின்றி நிர்வாணமாக அந்த நீர்ப்பரப்பில் நிற்க வைத்ததோடு அவர்களின் உடலில் வெள்ளை நிறச் சாயம் பூசப்பட்டு நிற்பது போலவும் புகைப்படத்தை எடுத்துள்ளார். இவருடைய இந்த முயற்சிக்கு மதவாதிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இருந்தபோதிலும், இவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதாவது சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு இதே இடத்தில் புகைப்படம் எடுக்கும் பொழுது கடல் பரப்பு மிகவும் பெரிதாக இருந்தது ஆனால் அதன் அளவு சுருங்கி விட்டது என்பதை இதன் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.