வெற்றிகரமாக இஸ்ரோவில் இருந்து 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்ட சந்திரயான்-3 திட்டம்!!

0
31
ISRO's Chandrayaan-3 project successfully launched into 3rd orbit!!
ISRO's Chandrayaan-3 project successfully launched into 3rd orbit!!

வெற்றிகரமாக இஸ்ரோவில் இருந்து 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்ட சந்திரயான்-3 திட்டம்!! 

சந்திரயான்-3 இஸ்ரோவில் இருந்து விண்கலமானது மூன்றாவது சுற்று வட்ட பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றி அடைந்து உள்ளது.

இது பற்றி இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் எனப்படும் இஸ்ரோ ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் சந்திரயான் 3 திட்டம் அட்டவணைப்படி சரியாக செயல்பட்டு கொண்டுள்ளது.

கர்நாடகாவின் பெங்களூர் நகரில் இஸ்ரோவில் இருந்து சந்திராயன்-3 விண்கலத்தினை வெற்றிகரமாக மூன்றாவது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணியானது தற்போது வெற்றியடைந்து உள்ளது.

அதேபோல் பூமிக்கு அருகே அடுத்த கட்ட சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணியானது வருகிற ஜூலை மாதம் 20ஆம் தேதி பிற்பகல் 2 மணியில் இருந்து 3 மணிக்குள் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலமானது கடந்த ஜூலை 13ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எல்விஎம்-3 எம்-4 என்ற ராக்கெட் மூலம் இந்த விண்கலம் ஏவப்பட்டது. ராக்கெட் நிர்ணயிக்கப்பட்ட 179 கிலோமீட்டர் தொலைவை அடைந்ததும் சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக இலக்கில் கொண்டு சேர்த்தது.

தற்போது விண்கலத்தின் நிலை இயல்பாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் முதல் சுற்று பாதையை உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. அப்போது விண்கலமானது 41,762* 173 கிமீ தொலைவில் சுற்றுப்பாதையில் உள்ளது என பதிவிட்டது.

இதனை தொடர்ந்து, 2-வது சுற்றுப்பாதைக்கு விண்கலம் உயர்த்தும் பணி நேற்று நடந்தது. இதன் காரணமாக, விண்கலம் 41,603 கி.மீ. x 226 கி.மீ. உயரத்தில் இருந்தது. தொடர்ந்து, 3-வது சுற்றுப்பாதைக்கு விண்கலம் உயர்த்தும் பணி இன்று பிற்பகல் 2 மணி முதல் 3 மணிக்கு இடையே நடந்தது.