இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்த ஒளிப்பதிவாளர் ஆக படிப்பு அதன் பின் தமிழ் சினிமாவில் சிறந்த ஒளிப்பதிவாளர் என்றால் அது பாலு மகேந்திரா தான் என்று பேசக்கூடிய அளவுக்கு உயர்ந்து நின்றவர். ஆனால் ஒளிப்பதிவாளர் ஆக மட்டுமல்லாது சிறந்த இயக்குனராகவும் தன்னால் பணியாற்ற முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர்.
சினிமாத்துறை உலகில் எந்த அளவிற்கு இவருக்கு பெயரும் புகழும் இருந்ததோ அதே அளவிற்கு இவர் மீதான சர்ச்சைகள் நீடித்துக் கொண்டே இருந்தன. காரணம், முதலில் இவர் அகிலா என்பவரை திருமணம் செய்து இவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் பட்சத்தில் நடிகை சோபாவை இரண்டாவது திருமணம் செய்தார். ஆனால் அத்தோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் நடிகை மௌனிகாவுடன் லிவிங் டுகெதரில் இருந்தது இவர் மீது பேசப்பட்ட சர்ச்சைகளை அதிகரிக்க தொடங்கின. எது எப்படி இருந்தாலும் ஒளிப்பதிவாளராகவும் இயக்குனராகவும் இன்றளவும் இவர் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடிகை மௌனிகா பேட்டி ஒன்றில் இயக்குனர் பாலு மகேந்திரா பற்றி பேசியிருப்பதாவது :-
இன்னொரு பெண்ணினுடைய வாழ்க்கையை பங்கு போட்டு வாழ்ந்தது தவறான செயல்தான் என்றும் ஆனால் அந்த தவறான செயலை தான் சரியாகவே வாழ்ந்ததாகவும் நடிகை மௌனிகா தெரிவித்துள்ளார். மேலும் தங்களுடைய வாழ்வில் ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல மதிப்பு மரியாதைகளை கொடுத்துக் கொண்டதாகவும் , தனக்கு மரியாதை கொடுப்பதில் அவர் எந்த அளவு குறை வைத்ததில்லை என்றும் அதேபோன்றுதான் மௌனிகாவும் நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பாலு மகேந்திரா அவர்களின் மகனுக்கும் தனக்கும் 5 முதல் 6 வயது வரை மட்டுமே வித்தியாசம் என்றும் தன் மகனுடைய பேண்ட் சர்ட் போன்றவற்றை தனக்கு போட்டு போட்டோ சூட் எடுத்ததாகவும், அவருடைய சைக்கிளில் அமர வைத்து என்னை நிறைய போட்டோக்கள் பாலுமஹிந்திரா அவர்கள் எடுத்தார் என்றும் மௌனிகா தெரிவித்திருக்கிறார்.