தவறில்லை! கழிவறையில் சமைப்பது! அமைச்சரின் பதிலாள் பரபரப்பு!

0
270

எவ்வளவோ நாகரிகம் வளர்ச்சி அடைந்தாலும் இது போல சம்பவங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. அப்படி என்ன சம்பவம் என்று கேட்கிறீர்களா? இதோ நடந்தவையும் அமைச்சரின் பதிலும்.

மத்திய பிரதேத மாநிலம் சிவபுரி மாவட்டம் கரோராவில் இருக்கும் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு சமைக்கப்படும் உணவு கழிவறை அருகில் வைத்து சமைக்கப்படுகிறது. சமையல் பாத்திரங்களை கழிவறை மேல் வைப்பதாகவும் புகார் எழுந்து இது அங்கிருக்கும் ஊடகங்களில் செய்திகள் பரவியதால் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து பேசியுள்ள அம்மாநில அமைச்சர் இமார்த்தி தேவி, ”அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையின் அருகில் சமைப்பதில் தவறு என்ன இருக்கிறது? சமைத்த பாத்திரங்களை கழிவறை மேல் வைப்பதொன்றும் தவறு கிடையாது. கழிவறை அருகில் சமயலறை இருப்பதில் தவறு இல்லை. வீட்டிற்குள்ளேயே குளியலறையுடன் கழிவறையும்தான் இருக்கிறது. அதற்காக சாப்பிட மறுக்கிறார்களா என்ன?” என்று கேட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய மாவட்ட அதிகாரி, முறையான சமையலறையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதில் சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி கொடுத்துள்ளார்.

பெரிய பொறுப்பில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட உறுப்பினராக இருந்தும். பொது வெளியிலோ ஊடகங்கள் எப்படி பேசுவது என்பது தெரியாமல் இருக்கின்றனர். கழிவறையில் இருந்து தான் அதிகமாக நோய் கிருமிகள் பரவுகின்றன என்பது அறிந்தது. அதனாலே மத்திய அரசு கை கழுவும் செயலை மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இது தெரியாமல் மத்திய பிரதேச அமைச்சர் இப்படி பொறுப்பில்லாமல் கூறியிருப்பது மக்களிடையே கொந்தளிப்பை வெறுப்பை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க : பாட்டாளி மக்கள் கட்சி ok! இனி No பிஜேபி! அதிமுக அதிரடி!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Previous articleவன்னியரால் வெற்றி! வன்னியருக்கே துரோகமா? பாட்டாளி மக்கள் கட்சியினர் கேள்வி!
Next articleகர்நாடகத்தில் அடுத்த முதல்வர் யார்? உச்சகட்ட பரபரப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here