தஞ்சாவூர் மாவட்டத்தில் மூதாட்டியிடம் இருந்து நகை கொள்ளை! மர்ம நபர்களை தேடி வரும் போலீசார்!

0
109
Jewel theft from old woman in Thanjavur district! The police are looking for the mysterious people!
Jewel theft from old woman in Thanjavur district! The police are looking for the mysterious people!

தஞ்சாவூர் மாவட்டத்தில் மூதாட்டியிடம் இருந்து நகை கொள்ளை! மர்ம நபர்களை தேடி வரும் போலீசார்!

தஞ்சாவூர் மாவட்டம் அருள் ஆனந்த அம்மாள் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் இவரது மனைவி ஆக்னஸ் மேரி (82). இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி அவரவர்களின் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்கள். இந்நிலையில் தனிஸ்லாஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் ஆப்பனாஸ் மேரி மட்டும் அவரது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

மேலும் அவரது வீட்டின் மாடிப்பகுதியை வாடகைக்கு கொடுக்க முடிவு  செய்து வீட்டின் வாசலில் அறிவிப்பு பலகை ஒன்றை வைத்திருந்தார். அறிவிப்பு பலகையை பார்த்த  மர்ம நபர்கள்  அவரின் வீட்டை வாடகைக்கு கேட்டுள்ளனர். அதனை நம்பி அவர் அந்த  மர்ம நபர்களை மாடியில் இருக்கும் அறைக்கு  அழைத்துச் சென்றுள்ளார். மேலும் மாடி உள்ள அறைக்கு  சென்றவுடன் பின்னால் வந்தால் மர்ம நபர்கள் ஆக்னஸ் மேரியை அங்கிருந்த நாற்காலியில் கட்டிப்போட்டு விட்டனர்.

மேலும் சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை  அழைக்க முயற்சித்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்கள். மேலும் அந்த மர்ம நபர்கள் ஆக்னஸ் மேரி அணிந்திருந்த தங்கசங்கலி மற்றும்   வளையல், மோதிரம் என ஐந்து பவுன் நகைகளை கொள்ளை அடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து ஆக்னஸ் மேரியை நாற்காலியில் இருந்து விடுவித்தனர்.

மேலும்  இது குறித்து தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பயிடத்திற்கு  வந்து விசாரணை நடத்தினார்கள்.  மேலும் போலீசர்கள் கைரேகை நிபுணர்களை வரவழைத்து அறையில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து மூதாட்டியிடம்  5 பவுன் நகைகளை எடுத்துச் சென்ற மர்ம நம்பர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
Parthipan K