12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு சமூக நலத்துறையில் வேலை!! எழுத்து தேர்வு கிடையாது.. உடனே விண்ணப்பிக்க!!

Photo of author

By Gayathri

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு சமூக நலத்துறையில் வேலை!! எழுத்து தேர்வு கிடையாது.. உடனே விண்ணப்பிக்க!!

Gayathri

திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கக்கூடிய குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் கீழ் இயங்கி வரக்கூடிய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக இருக்கக்கூடிய உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடத்தை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

காலியாக உள்ள பணியிடத்தின் விவரங்கள் :-

 

காலி பணியிடம் – 1

 

கல்வி தகுதி – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது கணினியில் டிப்ளமோ சான்றிதழ் படிப்பு. பணி அனுபவம் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை

 

வயது வரம்பு – 42 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

 

சம்பளம் – ரூ.13,240

 

தேர்வு முறை – நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்கும் முறை – https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2025/04/2025042397.pdf என்ற இணையதள பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு மே மாதம் 6 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி மே 6 ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முகவரி :-

 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்,

கொக்கிரகுளம்,

திருநெல்வேலி – 9