தலைமையின் ஒற்றுமையை போட்டு உடைத்த ஜான் பாண்டியன்! அவர்களுக்குள் இப்படியா?

Photo of author

By Hasini

தலைமையின் ஒற்றுமையை போட்டு உடைத்த ஜான் பாண்டியன்! அவர்களுக்குள் இப்படியா?

Hasini

John Pandian who broke the unity of the leadership! Is it like this among them?

தலைமையின் ஒற்றுமையை போட்டு உடைத்த ஜான் பாண்டியன்! அவர்களுக்குள் இப்படியா?

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில், இடம் பெற்ற தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவரான ஜான் பாண்டியன் அவர்கள், எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இப்போது அதிமுக பற்றி திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார். மேலும் அவர் தென்மாவட்டங்களில் தொகுதி கேட்டும், கூட கொடுக்காமல் பழிவாங்கும் நோக்கத்தோடும் நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவும் திட்டமிட்டு சென்னை எழும்பூர் தொகுதியில் என்னை போட்டியிட வைத்தார்கள் என்று ஜான் பாண்டியன் பகிரங்கமாக கூறியுள்ளார்.

அதிமுக தேர்தல் நேரத்தில் பழிவாங்கும் நடவடிக்கைக்கு ஆளாக்கப்பட்டும், திட்டமிட்டும் தோற்கடிக்கப்பட்டேன் என்றும் அவர் வருத்தம் அடைந்துள்ளார். மேலும் தென் மாவட்டங்களில் என்னை தேர்தல் பரப்புரை செய்ய கூட விடவில்லை என்றும் கூறினார். பல்வேறு கிராமங்களுக்கு சென்று தேர்தல் பரப்புரை செய்து இருந்தால் கூட தென்மாவட்டத்தில் இன்னும் அதிகமான தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று இருக்கும்.

தற்போதைய சூழ்நிலையில் அதிமுக உடன் உறவு மட்டுமே உள்ளது. கூட்டணி ஏதும் இல்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் தொடர்வோம் என்றும்,  அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களுக்குள்  ஒற்றுமையில்லை என்றும் வெளிப்படையாக கூறி உள்ளார். அதிமுகவில் இந்த இரண்டு பேருக்குள் இருக்கும் ஒற்றுமையின்மை அந்த கட்சியை அழிவை நோக்கி கொண்டு செல்கின்றது என்றும் கூறினார். முன்னாள் முதல்வர் ஈபிஎஸ் பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டது போல, ஏன்  அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் செய்யவில்லை என்றும் ஜான்பாண்டியன் கேள்வி எழுப்பு உள்ளார்.