ஆடி பதினெட்டு இதை மட்டும் வாங்குங்க!..அப்பறம் பாருங்க உங்கள் வாழ்வில் அமோகம் தான்!!

0
70

ஆடி பதினெட்டு இதை மட்டும் வாங்குங்க!..அப்பறம் பாருங்க உங்கள் வாழ்வில் அமோகம் தான்!!

 

மஞ்சள் என்பது நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருளாகும். அதிலும் குண்டு மஞ்சள் என்பது பெண்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய பொருளாக உள்ளது. காலங்காலமாக நம் முன்னோர்கள் இந்த குண்டு மஞ்சளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் இந்த ஆடி மாதம் வந்தாலே இந்த மஞ்சளை தான் அதிகம் குண்டு மஞ்சளை பற்றி நாம் நிறைய விஷயங்களை இங்கு காண்போம்.

குண்டு மஞ்சள் ஆடிப்பெருக்கு அன்று வாங்க வேண்டிய முக்கிய பொருளாகும்.குண்டு மஞ்சள் மகாலட்சுமியின் பூரண அம்சமாக விளங்குகிறது. வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு ஒவ்வொரு மஞ்சள் கிழங்கை கொடுத்து வழி அனுப்பினால் உங்களுடைய வறுமை நீங்கி தனதானியம் பெருகும் என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கையாக இருக்கிறது. எனவே வீட்டிற்கு வரும் பெண்களை வெறுங்கையோடு அனுப்பாமல் குடிக்க மோர் அல்லது தண்ணீர் கொடுத்து குண்டு மஞ்சள் ஒன்றை கொடுத்து அனுப்புங்கள்.அது போல ஆடிப்பெருக்கு நாளில் குண்டு மஞ்சளை புதிதாக வாங்கி வந்து அதை ஒரு பாத்திரத்தில் முழுவதுமாக நிரம்பும் படி வைக்க வேண்டும். எப்பொழுதும் பெண்கள் குண்டு மஞ்சளை சிறிதளவு தேய்த்து முகத்தில் பூசி தலைக்கு குளித்து வந்தால் பலவிதமான நோய்கள் நீங்குவதாக ஆன்மீகம் கூறுகிறது. இது ஆன்மீகம் மட்டுமல்லாமல் அறிவியலும் ஒப்புக் கொள்கிறது எனவே குண்டு மஞ்சளை வாங்கி அன்றைய நாளில் அம்மனை வழிபட்டு பயனடையுங்கள்.மேலும் உங்கள் வாழ்வில் இன்பம் கிட்டும்.

author avatar
Parthipan K