உங்கள் வாழ்வில் வெற்றியைக் காண 1 மாதம் மட்டும் இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!!

0
71
#image_title

உங்கள் வாழ்வில் வெற்றியைக் காண 1 மாதம் மட்டும் இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!!

ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம், வெற்றியை காண ஆர்வம் ஆசை இருக்கும். அதற்காக நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவோம். ஆனால் இந்த முயற்சியோடு சில ஆன்மீக வழிகளை பின்பற்றினால் 1 மாதத்தில் நிச்சயம் நல்ல பலனைக் காண முடியும்.

காலையில் கண் விழிக்கும் பொழுது முதலில் உங்கள் உள்ளங்கையை பார்த்து “அம் பகவ ஹ” என்று மூன்று முறை சொல்லவும்.

பின் வாசலுக்கு அல்லது மொட்டை மாடிக்கு சென்று பிரபஞ்சத்தையும், பஞ்ச பூத சக்தியையும், சூரிய பகவானையும் வணங்கி அன்றைய நாளுக்காக வேண்டிக் கொண்டு ஒரு கைப்பிடி அளவு கொள்ளு ஒரு தட்டில் வைத்து பறவைகளுக்கு தானம் செய்யவும்.

பின்பு, ஓரமாக ஒரு இடத்தில் அமர்ந்து பண வரவிற்கு “ஷ்ரீம்” என்ற மந்திரத்தை கண்களை மூடி 21 முறை உச்சரிக்கவும்.

அடுத்து நல்ல வருமானத்திற்காக ஃபைன்ட்-கௌன்ட்-டிவைன் என்ற வார்த்தையை 108 முறை சொல்லி முடித்து அன்றைய வேலைகளை கவனிக்க செல்லவும்.

பின்பு இரவு தூங்குவதற்கு முன் படுக்கையில் அமர்ந்து கண்களை மூடி “இறைவா – இன்றிய நாள் நல்லபடியாக அமைந்ததற்காய் நன்றி. இன்று என்னுடைய சந்தோசத்திற்கும், வளர்ச்சிக்கும் காரணமாய் இருந்த அனைவருக்கும் என் நன்றி. இன்று நான் யாரையாவது காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறிவிட்டு தூங்கச் செல்லவும்.

இவ்வாறு 1 மாதம் வரை செய்யவும். வணக்கத்திற்கும், நன்றிக்கும், மன்னிப்பிற்கும் இத்தனை மகத்துவமா என்று நீங்களே ஆச்சர்யப்படும் வகையில் உங்கள் முன்னேற்றம் இருக்கும்.