இந்த உணவுகளை மட்டும் மீண்டும் சூடு செய்யாதீர்கள்!! உயிருக்கே ஆபத்து!!

0
258
Just don't reheat these foods!! Danger to life!!
Just don't reheat these foods!! Danger to life!!

இந்த உணவுகளை மட்டும் மீண்டும் சூடு செய்யாதீர்கள்!! உயிருக்கே ஆபத்து!!

நாம் தினசரி உண்ணும் உணவில் பல தவறுகளை செய்வதால் அதன் சத்துக்கள் எதுவும் நமக்கு முழுமையாக கிடைக்காமல் போகிறது. அந்த வகையில் ஒரு முறை சூடு செய்து சாப்பிட்டு போனால் வை வரும் வரை சூடு செய்வதினால் அதில் உள்ள எந்த சத்தும் நமக்கு கிடைக்காமல் போவதுடன் மேற்கொண்டு உடல் உபாதைகளையும் ஏற்படுத்தும். முதலாவதாக முட்டையை அதன் உரித்த நேரத்தில் வேகவைத்து எடுத்து விட வேண்டும்.

அதிகமான நேரம் வரை வேக வைத்தால் கிருமிகள் உருவாகி நமக்கு செரிமான பிரச்சனை ஏற்படாதுவே ஒரு காரணமாக மாறிவிடும். அதிக நேரம் வேக வைத்த முட்டையை பெரியவர்கள் அல்லது குழந்தைகளுக்கு கொடுத்தால் முறையாக அஜீரணம் ஆகாமல் அவதிப்படுவர். அதனால் முட்டையை அதற்குரிய நேரத்தில் வேகவைத்து கொடுக்க வேண்டும். அதேபோல முட்டையை சமைத்து விட்டால் அதனை மீண்டும் மறுமுறை சூடுபடுத்த கூடாது.

அதிக நேரம் கழித்தும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். முட்டையை சமைத்த ஒரு மணி நேரத்திற்குள்ளேயே அதனை உண்டு விட வேண்டும். அப்பொழுதுதான் பாக்டீரியா கிருமிகள் எதுவும் நமது உடலை பாதிக்காமல் இருக்கும். இதேபோல இரண்டாவது ஆக உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கை அதிக நேரம் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. அதேபோல ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து சாப்பிட்டாலும் அதிலுள்ள புரதம் அனைத்தும் நீங்கிவிடும்.

மீண்டும் மீண்டும் உருளைக்கிழங்கு குழம்பு பொரியல் போன்றவற்றை சூடு படுத்தி சாப்பிடுவதால் வாந்தி வயிற்றுப்போக்கு போன்றவை உண்டாக நேரிடும். மூன்றாவதாக இருப்பது காளான். காளானை நம் சமைத்து நான்கு மணி நேரத்திற்குள் சாப்பிட்டு விட வேண்டும். இல்லையென்றால் அதில் நுண்ணுயிரி பாக்டீரியாக்கள் தொற்று அதிகமாகிவிடும். அதேபோல இன்று சமைத்த காளானை மறுநாள் காலையில் சூடு செய்து சாப்பிடுவதால் அதில் உள்ள புரோட்டிலின் அளவில் மாற்றம் ஏற்படலாம் என்று கூறுகின்றனர்.

குறிப்பாக இதய சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் 50 வயதை கடந்தவர்கள் காளாணை மறுநாள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மாரடைப்பு போன்றவை ஏற்பட அதிக சாத்தியக்கூறுகள் உருவாகிவிடும். அதேபோல இறைச்சியில் கோழிக்கறியை மறுமுறை சூடு செய்யாமல் சாப்பிட வேண்டும். இல்லையென்றால் செரிமான பிரச்சனைக்கு ஆளாக நேரிடும்.