தினமும் காலையில் சாப்பிட்டால் போதும்!! முளைக்கட்டிய பயிர்கள்  20 மடங்கு ஊட்டச்சத்து நிறைந்தது!!

0
57

தினமும் காலையில் சாப்பிட்டால் போதும்!! முளைக்கட்டிய பயிர்கள்  20 மடங்கு ஊட்டச்சத்து நிறைந்தது!!

தற்போது எல்லாம் ஆரோக்கியமான உணவிற்கு பதிலாக அவசரமான உணவை உண்பதால் பல தீமைகள் நம் உடலில் ஏற்படுகிறது. இது மட்டுமின்றி பல்வேறு பிரச்சனைகள் நம் உடலில் ஏற்படுகிறது. இதற்கு பதிலாக முளைகட்டிய பயிர்கள் நமக்கு தேவையான ஆரோக்கியத்தை தருகின்றன.  இவைகள் எல்லாம் அதிக புரதம் கொண்டுள்ளதாக கருதப்படுகிறது. மேலும் நம் பாரம்பரியத்தை சுட்டிக்காட்டும் உணவுகளில் முக்கியமான ஒன்று முளைகட்டிய பயிர்கள் உள்ளது. சாதாரண பயிர்களை விட முளைகட்டிய பயிர்களில் அதிக அளவு ஆரோக்கியம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது தேவையான ஒன்றாகும். ஆரோக்கியம் நிறைந்த உணவுகளில் முதலிடம் பிடித்தவை முளைக்கட்டிய பயிர்கள் ஆகும். இவற்றை குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடக்கூடிய  நல்ல ஒரு உணவு பொருளாகும். இதில் விட்டமின் பி சி மற்றும் கே,  புரோட்டீன்கள், ஒமேகா அமிலம், இரும்புச்சத்து, ஆன்டிஆக்சிடென்ட், நியாசின் தயாமின் மற்றும்  ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

முளைகட்டிய பயிர்களின் நன்மைகள்

1. முளைக்கட்டிய பயிர்கள் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. மேலும் உடலுக்கு தேவையான எனர்ஜியை தந்து உதவுகிறது. இதனை உண்பதால் உடல் குறைக்கவும் உதவுகிறது.

2. விட்டமின் சி இருப்பதால் கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது மற்றும் பார்வையை மேம்படுத்துகிறது

3. இவற்றில் ஒமேகா அமிலம் அதிகம் இருப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

4. ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகமாக இருப்பதால் ஹார்மோன் சுரக்க உதவுகிறது. மேலும் புற்றுநோய் வரும் காரணிகளை தடுக்கிறது.

5. முளைக்கட்டிய பயிர்களில் விட்டமின் பி நிறைந்துள்ளதால் சரும பொலிவை அதிகம் ஏற்படுத்துகிறது. மேலும் இது சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.

6. மேலும் இவற்றில் இருக்கும் சிலிக்கா நியூட்ரியண்ட் சருமத்தில் செல் இறப்பதை தடுக்கிறது.

முளைகட்டிய பயிரை எப்படி செய்வது என்று பார்ப்போம்

தேவைப்படும் பொருட்கள்            பச்சை பயிறு                              வெந்தயம்                                      கொள்ளு                                              எள்ளு                                      வேர்க்கடலை                                        கம்பு                                கொண்டைக்கடலை                       பீன்ஸ் கொட்டை

செய்முறை

முதலில் அனைத்து வகையான விதைகளையும் எடுத்து ஈரத் துணியால் முடிந்து வைத்து அதனை தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும். அடுத்த நாள் காலையில் எடுத்து பார்த்தால் பயிர்களில் முளைத்து காணப்படும்.  இதுவே முளைகட்டிய பயிர்கள் என்பார்கள்

இவைகளை உண்பதால் உடலில் பல பிரச்சனைகள் சரியாகும். இது மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. விதைகளை வேக வைத்தோ அல்லது பொறித்தோ சாப்பிடுவது நல்லது அல்ல.

முளைகட்டிய பயிரை எடுத்துக் கொண்ட பிறகு உடலுக்கு வேலை தர வேண்டும். ஏனெனில் முளைகட்டிய பயிர்கள் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். முளைக்கட்டிய பயிரில்  அமிலேஸ் சுரப்பதால் ரத்தத்தில் உள்ள உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும்.  இதுபோல பல நன்மைகள் இருப்பதால் அனைவரும் தினமும் காலையில் முளைகட்டிய பயிர்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

author avatar
Jeevitha