வீட்டில் இந்த பொருட்களை வைத்தால் வறுமை துரத்துமாம்!

0
33
#image_title

வீட்டில் இந்த பொருட்களை வைத்தால் வறுமை துரத்துமாம்!

நம் வீட்டில் எப்போதும் செல்வ செழிப்பு நிறைந்திருக்க வேண்டும், லக்ஷ்மி கடாட்சம் இருக்க வேண்டும் என்று நாம் அனைவருமே விரும்புவோம்.

சிலர் நம்மிடம் பேசும் போது அவர் அழகாக பேசினால், அவர்களிடமிருக்கும் நேர்மறை எண்ணங்களை நாம் உணர முடியும். சிலர் வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் வீட்டை பராமரிக்கும் அழகு மிக சிறப்பாக இருக்கும். ஆனால், ஒரு சிலரோ வீட்டை அலங்கோலமாக வைத்திருப்பார்கள். அதிலும் தேவையில்லாத பொருட்களை கழிக்காமல் அதையும் பொக்கிஷம்போல் பாதுகாத்து வைத்திருப்பார்கள்.

அப்படி வீட்டில் தேவையில்லாத பொருட்களை வைத்திருந்தால் வறுமை நம்மை துரத்துமாம். சரி வீட்டில் எந்த பொருட்களையெல்லாம் வைத்திருக்கக்கூடாது என்று பார்ப்போம் –

துருப்பிடத்த பழைய இரும்புகளை வீட்டில் வைக்கக்கூடாது. அப்படி வைத்திருந்தால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஏற்படும்

உடைந்த கண்ணாடிகள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், உடைந்த மண் பாண்டங்கள் வைத்திருக்கக்கூடாது.

காய்ந்த செடிகள், பட்டுப்போன மரங்கள், ஓடாத கடிகாரம், கிழிந்த ஆடைகள், உபயோகம் இல்லாத பழைய துணிகள் வீட்டில் வைத்திருக்கக் கூடாது.

அலுவலகம், வீடு, தோட்டம், பண்ணைகளில் பட்டுப்போன மரங்கள் இருந்தால் வறுமையை வரும்.

ஓடாத கடிகாரங்கள் வீட்டில் இருந்தால் கடன் பிரச்சனைகளும், சண்டை சச்சரவுகளும் ஏற்படும்.

இது போன்ற பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்தி விட வேண்டும். இவ்வகையான தேவையற்ற பொருட்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தி வீட்டினை சுத்தமாகவும், அழகாவும், பராமரித்து வைத்திருந்தால் வீட்டில் ஆரோக்கியமும், சகல ஐஸ்வர்யங்களும் வந்து சேரும்.

author avatar
Gayathri