கேரளா ஸ்பெஷல் “மாம்பழ புளிசேரி” – செய்வது எப்படி?

0
92
#image_title

கேரளா ஸ்பெஷல் “மாம்பழ புளிசேரி” – செய்வது எப்படி?

கேரளா மக்களின் விருப்ப உணவுகளில் ஒன்று மாம்பழ புளிசேரி. இவை பழுத்த மாம்பழம், தயிர், மஞ்சள் தூள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

தேவையான பொருட்கள்:-

*பழுத்த மாம்பழம் – 1

*புளிப்பில்லாத தயிர் – 3/4 கப்

*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு:-

*தேங்காய் துண்டுகள் – 4

*சீரகம் – 1 தேக்கரண்டி

*பச்சை மிளகாய் – 2

*அரிசி மாவு – 1 1/2 தேக்கரண்டி

*தனி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

தாளிக்க:-

*கடுகு – 1 தேக்கரண்டி

*வெந்தயம் – 1/2 தேக்கரண்டி

*குண்டு மிளகாய் – 3

*கறிவேப்பிலை – 2 கொத்து

*தேங்காய் எண்ணெய் – 2 1/2 தேக்கரண்டி

*தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:-

*ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துண்டுகள், பச்சை மிளகாய், சீரகம், அரிசிமாவு, மிளகாய்த்தூள், தண்ணீர் சிறிது சேர்த்து மைய அரைக்கவும்.

*அரைத்த தயிருடன் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும்.

*மாம்பழத்தை சுத்தம் செய்து பிளேட்டில் பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

*அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 1 தேக்கரண்டி அளவு தேங்காய் எண்ணெய் விட்டு சூடேற்றவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள மாம்பழம், மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

*மாம்பழம் பாதி வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து அடுப்பை அணைத்துக் கொள்ளவும். பின்னர் அதன் மேல் 1 தேக்கரண்டி அளவு காய்ச்சாத தேங்காய் எண்ணெய் ஊற்றி கிளறி இறக்கவும்.

*அடுத்து அடுப்பில் ஒரு கடாயில் வைத்து அதில் 1/2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அவை சூடானதும் கடுகு. வெந்தயம், மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து கொள்ளவும். இந்த தாளிப்பை தயார் செய்து வைத்துள்ள மாம்பழ புளிசேரியில் கலந்து விடவும்.