மாத்திரை இல்லாமல் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்!! இதை செய்யுங்கள்!!

0
119
#image_title

மாத்திரை இல்லாமல் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்!! இதை செய்யுங்கள்!!

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உடலில் இருக்கும் கழிவுகள் அவ்வ போது வெளியேறவும் வேண்டும். இந்த கழிவுகளை சுத்தம் வெளியே அனுப்பும் வேலை யை செய்வதுதான் நம் உடலில் இருக்கும் சிறுநீரகம். சிறுநீரகத்தின் ஆரோக்கி யத்தில் பாதிப்பு உண்டாகும் போது போது உடலின் இயல்பான பணிகள் நடைபெறாது. இவ்வாறு தொடர்ந்து நடக்கையில் சிறுநீரகத்தில் கல் உருவாகும்.

உப்பு அதிகம் அல்லது குறைவாக சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் உருவாகும். தண்ணீர் அதிகமாக அல்லது குறைவாக குடித்தால் சிறுநீரகக் கற்கள் உருவாகும். இது மனித உடலில் பெரும் பிரச்சனையை உண்டாக்கக்கூடியது. இதனை இயற்கை முறையில் சரி செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.

ஒருவர் தினமும் சரியான அளவில் தண்ணீர் குடித்தால், சிறுநீரில் உள்ள அதிகப்படியான கனிமச்சத்துக்கள் சிறுநீரின் வழியே வெளியேற்றப்பட்டு, சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படுவதோடு, ஏற்கனவே இருக்கும் சிறுநீரக கற்களும் வெளியேறிவிடும்.

சிறுநீரகத்தில் உள்ள கற்களை வெளியேற்றுவதற்கு பீன்ஸ் சிறந்த மருந்தாக உதவுகிறது. பீன்ஸ் காயை கால் கிலோ எடுத்துக் கொள்ளுங்கள். பீன்ஸை நீரில் நன்கு கழுவி அதனுள் இருக்கும் விதையை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர், பருக்கிய பீன்ஸ் உடன் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் மிதமான தீயில் இரண்டு மணி நேரம் கொதிக்க வைக்கவும். இதனை ஆரியபிறகு அதில் இருக்கும் நீருடன் சேர்த்து நன்கு கூல் போன்று அரைத்து எடுத்துக் கொள்ளவும். சுவைக்காக உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்துக் கொள்ளாமல் குடித்து வருகையில் சிறுநீர் கற்கள் முழுமையாக வெளியேறும்.

மேலும் இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். அருந்திய பிறகு 3 மணி நேரத்தில் 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இதனிடையில் உணவு உண்பதை தவிர்த்தல் வேண்டும். இந்த நாட்களில் அதிக வேலை செய்தல் கூடாது. அதன் பிறகு பசி எடுக்கும் நேரங்களில் எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். இந்த முறையை மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே பின்பற்ற வேண்டும். இந்த முறையை சரியாக செய்து வந்தால் அன்றைய நாட்களில் சிறுநீரக கற்கள் வெளியேறும்.

இதனை கர்ப்பிணி பெண்கள், குழந்தைக்கு பாலூட்டும் பெண்கள், சிறுநீரக செயலிழப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டும். பொதுவாக பீன்ஸை வாரத்தில் இரண்டு முறை பொறியலாகவோ சூப்பாகவோ செய்து சாப்பிட்டு வருகையில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க முடியும்.

 

 

author avatar
Selvarani