தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் வீட்டில் செல்வம் நிலைக்காமல் போக காரணம் இவை தான்..!!

0
53
#image_title

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் வீட்டில் செல்வம் நிலைக்காமல் போக காரணம் இவை தான்..!!

தங்கள் இல்லத்தில் செல்வம் நிலைக்காமல், தேவையில்லா செலவு ஏற்பட பல்வேறு கரணங்கள் சொல்லப்படுகிறது. இன்றைய காலத்தில் பெரும்பாலனோர் வீட்டில் உள்ள பூஜை அறையை முறையாக பராமரிப்பது கிடையாது. எந்த நாட்களில் என்ன வழிபாடு செய்ய வேண்டும்? எவற்றை செய்தால் செல்வத்தை அள்ளி கொடுக்கும் லட்சுமி வீட்டில் குடி கொள்வாள் என்பது குறித்த முறையான வழக்கங்கள் நம்மிடம் இல்லை. இதனால் தான் வீட்டில் பணம் சேராமல் ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது.

உங்கள் வீட்டில் செல்வம் நிலைக்காமல் போக காரணம்:-

வீட்டில் உடைந்த கண்ணாடி பொருட்கள் இருக்கக் கூடாது. இருக்கும் பட்சத்தில் வீட்டில் லட்சுமி கடாச்சம் நீங்கி விடும். இதனால் வீட்டில் செல்வம் தங்காமல் போகும்.

நம்மில் பெரும்பாலானோர் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை. விசேஷ நாட்களில் மட்டும் வீட்டை சுத்தம் செய்யாமல் வாரத்திற்கு ஒரு முறை செவ்வாய், வெள்ளி தவிர்த்து மற்ற நாட்களில் வீட்டை துடைப்பது மிகவும் நல்லது.

செவ்வாய், வெள்ளிக் கிழமையில் வீட்டு சுப நிகழ்ச்சிகள், பண்டிகை நாட்கள் வந்தால் அந்நாளில் வெண்ணெயை உருக்க கூடாது. வெண்ணெய் மகா லட்சுமியின் அம்சமாக கருதப்படுவதால் அவற்றை உருகினால் வீட்டில் லட்சுமி கடாச்சம் நீங்கி விடும் என்பது முன்னோர்கள் கருத்து.

வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு பாகற்காயில் செய்த உணவை பரிமாறக் கூடாது. விசேஷ நாட்களில் பாகற்காயை உணவாக செய்தால் வீட்டில் குடி இருக்கும் மகா லட்சுமி வீட்டை விட்டு நீங்கி விடுவாள் என்பது ஐதீகம்.

வீட்டு பூஜை அறையில் காய்ந்த மலர்கள், பூக்கள், காய்கள் இருக்கக் கூடாது. இருக்கும் பட்சத்தில் வீட்டில் லட்சுமி கடாச்சம் நீங்கி விடும்.

வீட்டில் அரிசி, கல் உப்பு, பருப்பு உள்ளிட்டவைகள் நிறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். அதற்கு தாட்பாடு ஏற்பட்டால் வீட்டில் லட்சுமி கடாச்சம் நீங்கி விடும்.