கோவையில் அதிர்ச்சி! நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற மாணவி பாலியல் பலாத்காரம்

Photo of author

By CineDesk

கோவையில் அதிர்ச்சி! நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற மாணவி பாலியல் பலாத்காரம்

CineDesk

Updated on:

Coimbatore School girl raped by gang on her birthday

கோவையில் அதிர்ச்சி! நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற மாணவி பாலியல் பலாத்காரம்

சக நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குச் சென்ற பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை சேர்ந்த பதினொறாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர், சக மாணவர் ராகுல் என்பவருடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள ஒரு பூங்காவிற்கு சென்றுள்ளார். அங்கு, ராகுலின் நண்பரான மணிகண்டன் என்பவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த மாணவி புகார் அளித்ததன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பள்ளி மாணவர் ராகுலை கைது செய்து சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

மேலும் குற்றவாளி மணிகண்டனுக்கு உடந்தையாகஇருந்த பிரகாஷ்கார்த்திகேயன் மற்றும் நாராயணமூர்த்தி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள குற்றவாளி மணிகண்டனையும், அவரது மற்றொரு நண்பரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களில் பெண்ககளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வெளியாகிவருவது பெண்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.இதற்கு முற்று புள்ளி வைக்க கடுமையான சட்டத்தினை ஆளும் அரசுகள் கொண்டுவரவேண்டும் என பொது மக்கள் விரும்புகின்றனர்.