குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு இந்த வடிவில் கூட வருவார்..!

0
184
#image_title

குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு இந்த வடிவில் கூட வருவார்..!

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து குலதெய்வ வழிபாடு இருந்து வருகிறது. அவரவர் குலதெய்வத்திற்கு அடுத்த மற்ற தெய்வங்கள். நம் குலத்தை காக்கும் கடவுள் சில ரூபங்கள் மூலம் நம் வீட்டிற்கு வரும். அதை சில நிகழ்வுகள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

ஒரு சுப நிகழ்ச்சி பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது நம் குடும்பத்தை சாராத குழந்தை.. பக்கத்து வீட்டு குழந்தை, உறவினர் குழந்தை வீட்டிற்குள் ஓடி வந்தால் நம் குலதெய்வம் நாம் செய்ய போகும் சுப நிகழ்ச்சிக்கு ஆசி வழங்கி இருக்கிறது என்று அர்த்தம்.

வீட்டின் முன் காகம், கழுகு, கிளி உள்ளிட்ட பறவைகள் அடிக்கடி நடமாடினால் குலதெய்வம் நம் வீட்டிற்கு வருகிறது என்று அர்த்தம்.

கனவில் உங்கள் வீட்டை சுற்றி நீங்கள் வைக்காத தெய்வ சக்தி நிறைந்த வாழை மரம், வில்வ மரம், துளசி… இதுபோன்றவை வளர்வது போல் கண்டால் குலதெய்வம் மரம் வடிவில் உங்கள் வீட்டிற்கு வருகிறது என்று அர்த்தம்.

நம் குலத்திற்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு விட்டது என்று குலதெய்வம் நினைத்தால் அதை குறி சொல்லும் ஆண், பெண் மூலம் தெரியப்படுத்தும். வீட்டிற்கு மாடு வந்தால் குலதெய்வம் அதன் வடிவில் வருகிறது என்று அர்த்தம்.