குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சு தான் அணியில் இருக்க காரணம்… பிரபல இந்திய பந்துவீச்சாளர் பேட்டி… 

0
67
குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சு தான் அணியில் இருக்க காரணம்… பிரபல இந்திய பந்துவீச்சாளர் பேட்டி…
இந்திய அணியின் இடதுகை சுழற்பந்து  வீச்சாளர் குல்தீப் யாதவ் அவர்கள் சிறப்பாக பந்து வீசுவதால் அவர் இந்திய அணியில் இடம் பெறுகிறார் என்று இந்திய அணியின் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் யுசுவேந்திர சஹால் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு எதிராக தற்பொழுது இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடரில் விளையாடி வருகின்றது. இதற்கு முன்பு நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் ஒருநாள் தொடரையும் இந்திய அணி வென்றது. ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுசுவேந்திர சஹால் அவர்கள் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாமல் முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இடம் பிடித்த யுசுவேந்திர சஹால் முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இருப்பினும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. இந்நிலையில் குல்தீப் யாதவ் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசுவதாகவும், அதன் காரணமாகவே அணி நிர்வாகம் அவரை இந்திய அணியில் எடுப்பதாகவும் பேட்டியளித்துள்ளார்.
இது தொடர்பாக பேட்டியளித்த யுசுவேந்திர சஹால் “அணியில் ஆட்டத்திற்கு தகுந்தது போல பந்துவீச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டும். அதற்கு மட்டும் தான் நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம். இது எங்களுக்கு புதிது இல்லை. போட்டி நடக்கும் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால் அணியில் அதிகபட்சம் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டும் தான் இடம் பெறமுடியும்.
குல்தீப் யாதவ் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசுகிறார். அதனால் தான் அணி நிர்வாகம் குல்தீப் யாதவுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கின்றது. நான் இப்பொழுது தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். எப்பொழுது எல்லாம் எனக்கு விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றதோ அப்பொழுது எல்லாம் அதனை பயன்படுத்தி நான் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்” என்று பேட்டியளித்துள்ளார்.