வீட்டில் லட்சமி கடாக்சம் தங்க – பௌர்ணமி அன்னைக்கு இப்படி செய்யுங்கள்!!

0
51
#image_title

வீட்டில் லட்சமி கடாக்சம் தங்க – பௌர்ணமி அன்னைக்கு இப்படி செய்யுங்கள்!!

*ஒரு சிறிய பச்சைத் துணி எடுத்துக் கொள்ளவும். அதில் 3 ஜாதிக்காய், 11 ஏலக்காய், 6 வசம்பு, 2 தேக்கரண்டி பச்சைக் கற்பூரம், ஒரு கைப்பிடி அளவு வெட்டி வேர் போட்டு மூட்டையாக கட்டி பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடவும்.

பணப் பெட்டியில் எதாவது ரூபாய் நோட்டு கண்டிப்பாக இருக்க வேண்டும். ஏன்னென்றால் இந்த பொருட்களை எதன் மீது வைக்கின்றோமோ அதைத் தான் அது ஈர்த்துக் கொடுக்கும். பணத்தின் மீது வைத்தால் மட்டும் தான் பணத்தை ஈர்த்துக் கொடுக்கும்.

*இதேபோல் பௌர்ணமி திதி முடிவதற்குள் மற்றொரு முடிச்சை நிலைவாசலில் கட்டி விடவும். அதற்கு ஒரு பச்சை துணியில் சிறிது வெட்டிவேர், மூன்று வசம்பு, சிறிது பச்சைக் கற்பூரம் போதுமானது.

எந்த இரண்டு முடிச்சிகளையும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றினால் போதுமானது. பழையதைக் கால் படாத இடத்தில் போட்டு விடவும்.

இதை இரண்டு முறை மாற்றுவதற்குள் வீட்டில் நிச்சயம் லட்சுமி கடாக்சம் தங்க ஆரம்பிக்கும்.