குல தெய்வ சாபம் நீங்கி அருள் கிடைக்க வீட்டில் இந்த தீபம் போடுங்கள்!!

0
100
#image_title

குல தெய்வ சாபம் நீங்கி அருள் கிடைக்க வீட்டில் இந்த தீபம் போடுங்கள்!!

இன்று பெரும்பாலானோர் வீடுகளில் ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது. தீராத பிரச்சனை ஒரு குடும்பத்தை விடாமல் துரத்தினால் அவர்களுக்கு குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கவில்லை என்று அர்த்தம்.

குலதெய்வ சாபம் இருந்தால் தான் தீராத மனக் கஷ்டம், பணக் கஷ்டம், தீராத நோய் ஏற்படும். குலதெய்வத்தை மறந்து விடுதல், குலதெய்வத்தை வணங்காமல் இருத்தல் போன்ற காரணங்களால் குலதெய்வ சாபம் உருவாகும்.

எனவே குலதெய்வத்தின் மனம் குளிர்ந்து அவரின் அருள் முழுமையாக கிடைக்க வீட்டு பூஜை அறையில் ஒரு தீபம் போடவும்.

இதற்கு முதலில் மண் அகல் ஒன்று எடுத்துக் கொள்ளவும். இதற்கு மஞ்சள் குங்குமத்தால் போட்டு வைக்கவும்.

இந்த விளக்கை வீட்டில் குலதெய்வ படத்திற்கு முன் வைக்கவும். அடுத்து அந்த விளக்கில் சுத்தமான பசு நெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றவும். பிறகு குலதெய்வத்திடம் தங்களின் கஷ்டத்தை கூறி மனதார வேண்டிக் கொள்ளவும். இவ்வாறு செய்வதினால் உங்கள் குலதெய்வம் மனம் இறங்கி அருள் புரிவார். இந்த விளக்கை எந்த நாளில் வேண்டுமாலும் ஏற்றலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கும்.