எங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அவர்தான் பொறுப்பு!திமுகவை சாடும் பஜக!

0
196

இந்து மத நம்பிக்கைக்கு எதிராக திமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.

கொடைக்கானலில் வேலூர் இப்ராஹிம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சமயத்தில் அவர் ஒரு சில விஷயங்களை முன்வைத்தார் அதாவது இந்து மத நம்பிக்கைக்கு எதிராக திமுக செயல்பட்டுவருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் வாரத்தில் மூன்று நாட்களுக்கு இந்து மத வழிபாட்டு தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இது வேடிக்கையாக இருக்கிறது இருந்தாலும் அதே சமயத்தில் மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கிறார்கள். விநாயகர் சதுர்த்தி விழாவை கட்டுப்பாடுகளுடன் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

தற்போது இருக்கும் தமிழக அரசு மாநில பாஜக நிர்வாகிகளுக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பது இல்லை அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை உண்டு ஆனால் தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினை விரைவில் நேரில் சந்திக்க இருக்கிறேன். பொதுச் சொத்துக்கள் உள்கட்டமைப்பு உடன் கூடிய நிலங்களை தனியாருக்கு குத்தகைக்கு தான் மத்திய அரசு விடுகின்றது. அதனை மத்திய அரசு தனியாருக்கு விற்று விட்டது என்று சட்டசபையில் முதல் அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தது கண்டனத்திற்குரிய செயல் என கூறியிருக்கிறார்.

சமையல் எரிவாயு சிலிண்டர் இணையதளத்தை சிறிது பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு முந்தைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து கொண்டிருந்த சமயத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு மூன்று லட்சம் கோடி கடன் இருந்தது. அதனை மத்திய அரசு செலுத்தி வருகின்றது மிக விரைவில் பெட்ரோலிய பொருட்களின் விலை குறையும் என இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.

Previous articleஇன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் இதுதான்!
Next articleதமிழக கல்வித்துறை பள்ளிகளுக்கு அனுப்பிய அதிரடி சுற்றறிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here