எதிர்க்கட்சி அமளியால் மீண்டும் மக்களவை ஒத்திவைப்பு !!மாநில அவையில் பரபரப்பு!!

0
30
Lok Sabha adjournment again due to opposition party !!Commotion in state house!!
Lok Sabha adjournment again due to opposition party !!Commotion in state house!!

எதிர்க்கட்சி அமளியால் மீண்டும் மக்களவை ஒத்திவைப்பு !!மாநில அவையில் பரபரப்பு!!

ஜூலை மாதம் தொடங்கிய  நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது.  ஏற்கனவே எதிர்கட்சிகள் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர முடிவு செய்திருந்தார்கள்.

இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். மேலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளமாறு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டர்கள். அதனை தொடர்ந்து மக்களவையில் கங்கிராஸ் அளித்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார்.

மேலும் அதன் மீது விவாதம் நடத்தபடும் என்றும் தெரிவித்திருந்தது. மேலும் சபாநாயகர்  நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதை எதிர்த்து ஆளுங்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்கள். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 26 கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்து.

தற்பொழுது 10 வது நாளாக இன்று மழைகால கூட்டத் தொடர் தொடங்கப்பட்டு விவாதங்கள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .இதில் எதிர்கட்சிகள் மணிப்பூர் தொடர்பான கேள்வியை மீண்டும் எழுப்பி விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் எதிர்க்கட்சி தலைவர்கள் மணிப்பூர் நிலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலையிட்டு முறையான விளக்கமளிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் விவதாம் பெரிய அளவில் செல்வதால் இந்த அவையை பிற்பகல் 2 மணிக்கு ஒத்தி  வைப்பதாக அவை தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.

author avatar
Parthipan K