கடன் வாங்கிய தொழிலாளிக்கு கடவுள் காட்டிய கருணை! அடித்தது 12 கோடி ஜாக்பாட்.!!

Photo of author

By Jayachandiran

கடன் வாங்கிய தொழிலாளிக்கு கடவுள் காட்டிய கருணை! அடித்தது 12 கோடி ஜாக்பாட்.!!

Jayachandiran

கடன் வாங்கிய தொழிலாளிக்கு கடவுள் காட்டிய கருணை! அடித்தது 12 கோடி ஜாக்பாட்.!!

கேரள கூலித் தொழிலாளி ராஜன் என்பவருக்கு லாட்டரியில் 12 கோடி ஜாக்பாட் விழுந்துள்ளது. இவரது மகளின் திருமண செலவிற்காக வங்கியில் குறிப்பிட்ட தொகையை கடனாக வாங்கியுள்ளார். கூலித் தொழிலில் அதிக வருமானம் இல்லாத காரணத்தால் கடனை அடைக்க முடியாமல் வட்டிக்கு மேல் வட்டி ஏறி சுமார் 7 லட்சம் கடன் ஏறியுள்ளது.

இந்நிலையில், ராஜன் தனது அதிஷ்டத்தை நம்பி லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். வந்தால் வரட்டும் போனால் போகட்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தவருக்கு கடவுள் கருணை காட்டியதுபோல் லாட்டரி சீட்டில் 12 கோடி ஜாக்பாட் அடித்திருந்தது. லாட்டரி சீட்டில் பரிசுத் தொகை விழுந்த விஷயத்தை முன்பே அவர் அறியவில்லை. வாங்கிய லாட்டரி சீட்டை எடுத்துக் கொண்டு சென்ற ராஜனுக்கு பெரும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

இவர் வாங்கிய லாட்டரிக்கு 12 கோடி ரூபாய் பரிசுத் தொகை விழுந்ததை கேட்டவுடன் கூலித் தொழிலாளி ராஜன் நம்பமுடியாமல் மகிழ்ச்சியில் திளைத்தார். வெறும் 300 ரூபாய்க்கு வாங்கிய லாட்டரியில் 12 கோடி விழும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனை தன் குடும்பத்துடன் மகிழ்ந்து கடனை அடைத்துவிட்டு மகள்களை மேற்கொண்டு படிக்கவைக்க இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினார். லாட்டரி பரிசுத்தொகையால் கேரளாவில் லாட்டரியை ஆர்வத்துடன் வாங்கும் நபர்கள் மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.