நேற்று இந்தியன் பிரீமியர் லீக் தரப்பில் லக்னோ சூப்பர் ஜெயண்ட் வெர்சஸ் டெல்லி கேப்பிடல் அணி இடையேயான போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது.
இந்த போட்டியில் கே எல் ராகுல் அவர்கள் பங்குபெறாதது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்த பொழுது தனக்கு அழகிய பெண் குழந்தை பிறந்திருப்பதாக தன்னுடைய INSTAGRAM பதிவில் தெரிவித்திருக்கிறார். ஏதோ கே எல் ராகுலின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.
நேற்றைய லக்னோ சூப்பர் ஜெயின்ட் வெர்சஸ் டெல்லி கேப்பிடல் இடையே நடைபெற்ற ஆட்டம் முதல் இன்னிங்ஸ் முடிவடையும் பொழுது டெல்லி கேப்பிட்டல் அணி என்ன செய்யப் போகிறார்களோ என்பது போன்ற கேள்வியை எழுப்பினாலும் தங்களுடைய முதல் 10 ஓவர்களில் பெரிதளவு ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் நிறுத்தி நிறுத்தி ஆடிவந்த நிலையில் ரசிகர்கள் அவ்வளவுதான் என நினைத்த தருணத்தில் கடைசி 2 ஓவர்களில் அசிதோஸ் பரோல் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை நோக்கிச் சென்ற டெல்லி கேப்பிட்டல் அணியை வெற்றியின் பக்கம் அழைத்துச் சென்றார்.
ஆட்டம் ஒரு பக்கம் விறு விறு என சென்ற பொழுது மற்றொரு பக்கம் கே எல் ராகுல் தனக்கு பெண் குழந்தை பிறந்ததால் தான் ஆசீர்வதிக்கப்பட்டேன் என INSTAGRAMல் பதிவிட்டு இருப்பது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ரசிகர்களுக்கு மற்றும் ஒரு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.