பாஜக, சிவசேனா கட்சிகளுக்கு கெடு முடிந்தது: ஆளுனர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

0
72

பாஜக, சிவசேனா கட்சிகளுக்கு கெடு முடிந்தது: ஆளுனர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக எந்த கட்சியும் ஆட்சி அமைக்காமல் இழுபறி நிலை நீடித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்சி அமைக்க வருமாறு பாஜகவிற்கு அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்தார். தனிப்பெரும் கட்சி என்ற முறையில் பாஜகவிற்கு அவர் அழைப்பு விடுத்த போதிலும், ஆளுனர் அழைப்பை ஏற்று ஆட்சி அமைக்க பாஜக முன்வரவில்லை

இதனை அடுத்து சிவசேனா கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். சிவசேனா ஆட்சி அமைக்க முன் வந்தாலும் அந்தக் கட்சியால் தனது கட்சியின் ஆதரவு எம்எல்ஏக்கள் பட்டியல் மற்றும் தங்களுக்கு ஆதரவு தரும் கட்சிகளின் ஆதரவு கடிதங்கள் ஆகியவற்றை ஆளுனர் கொடுத்த காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்க முடியவில்லை. இதனையடுத்து நேற்று சிவசேனா தலைவர்கள் ஆளுநரை சந்தித்து மேலும் 48 மணி நேரம் கால அவகாசம் கேட்டனர். இந்த கால அவகாசத்தை கொடுக்க ஆளுநர் மறுத்ததை அடுத்து சிவசேனாவுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பும் முடிந்தது

இந்த நிலையில் பாஜக, சிவசேனா ஆகிய இரண்டு கட்சிகளும் ஆட்சி அமைக்காததை அடுத்து மூன்றாவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இக்கட்சிக்கு இன்று இரவு 8.30 மணி வரை மட்டுமே ஆளுநர் கெடு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தேசியவாத காங்கிரஸ் கட்சி குறிப்பிட்ட கெடுவிற்குள் ஆட்சி அமைக்க முன் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தனது வாய்ப்பை இழந்தால் அடுத்ததாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது ஏன் என்ப​து குறித்து ஆளுநர் மாளிகை அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது: சிவசேனா தரப்பில் ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவிக்கப்பட்டதாகவும் ஆனால் கூட்டணி கட்சியினரின் ஆதரவு கடிதங்கள் தரப்படவில்லை.

எனவே அதிக இடங்களில் வெற்றி பெற்ற 3-வது பெரிய கட்சி என்ற அடிப்படையில் தேசியவாத காங்கிரசுக்கு, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

author avatar
CineDesk