மகாராஷ்டிராவில் அரசியல் நிலை: அமித்ஷாவின் சாணக்கியத்தனம்

0
71

மகாராஷ்டிராவில் அரசியல் நிலை: அமித்ஷாவின் சாணக்கியத்தனம்

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைத்தபோது அக்கட்சி அமைக்க முன்வரவில்லை என்பது தெரிந்ததே. சிவசேனா ஆதரவு அளித்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில், சிவசேனா தொடர்ந்து முதல்வர் பதவியை கேட்டு பிடிவாதம் செய்ததால் பாஜக பின்வாங்கியது

இதனையடுத்து சிவசேனாவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநர், அக்கட்சிக்கு 2 நாள் கெடு விதித்தார். இந்த இரண்டு நாட்களில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கடிதங்களை அக்கட்சியால் பெற முடியவில்லை. எனவே சிவசேனாவுக்கு அளித்த வாய்ப்பும் வீணானது

தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்து ஒரு நாள் கெடு விதித்துள்ளார் ஆளுநர். தேசியவாத காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. ஒருவேளை சிவசேனா இந்த கூட்டணி சேர்ந்தாலும் சிவசேனா வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் அல்லது அமைச்சர் பதவிகளை மட்டுமே பெற்றுக் கொண்டு ஆதரவு தரவேண்டிய நிலை இருக்கும். சிவசேனாவுக்கு முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் அக்கட்சி இந்த கூட்டணிக்கு ஆதரவு கொடுக்குமா என்பது சந்தேகமே

இங்குதான் அமித்ஷாவின் அரசியல் சாணக்கியத்தனம் ஆரம்பமாகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத பட்சத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக வுக்கு ஒரு வாய்ப்பை கவர்னர் அளிப்பார் அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்படும் என்ற இரண்டை நிலைதான் உள்ளது. மீண்டும் பாஜகவுக்கு ஆளுனர் வாய்ப்பு கொடுத்தால் 25 ஆண்டுகால நட்பு கட்சி என்றும் பார்க்காமல் சிவசேனாவை உடைப்பதுதான் அமித்ஷாவின் கணக்கு என கூறப்படுகிறது. ஆனால் உடைக்க வேண்டிய அவசியமே இருக்காது என்றும், பாஜக ஆட்சி அமைக்க சிவசேனா எம்.எல்.ஏக்களே பாஜகவிடம் வலிய வருவார்கள் என்றும் கூறப்படுகிறது

அதுமட்டுமின்றி இம்முறை ஆட்சி அமைக்க முடியாமல் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் சிவசேனாவின் இமேஜ் டேமேஜ் ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை. அக்கட்சிக்கு இருக்கும் செல்வாக்கு பெருமளவு சரியும் என்றும், மீண்டும் தேர்தல் நடந்து தனித்து போட்டியிட்டால் இப்போது கிடைத்திருக்கும் தொகுதிகளில் பாதிகூட கிடைக்காது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்

author avatar
CineDesk