ஒரு ஸ்பூன் செய்து இரவில் தடவி விட்டு படுங்கள்!! காலையில் கருவளையம் காணாமல் போய்விடும்!!

0
78
#image_title

ஒரு ஸ்பூன் செய்து இரவில் தடவி விட்டு படுங்கள்!! காலையில் கருவளையம் காணாமல் போய்விடும்!!

பெண்களுக்கும் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான முக்கியமான பிரச்சனை கண் கருவளையம் ஆகும். அதிக வேலை சுமையினால் தூங்காமல் இருப்பதால் கண்களை பாதிக்கிறது. இதனால் கண்களில் கருப்பு வளையம் தோன்றுகிறது. மேலும் சிலருக்கு மன அழுத்தம் காரணமாகவும் ஏற்படுகிறது. கருவளையம் தோன்றுவதால் முகம் சற்று பொலி இழந்து வயதான தோற்றத்திலும் காணப்படுகிறது. இதனை விரைவில் சரி செய்யவில்லை என்றால் கண்களை சுற்றி கருப்பு வளையம் அதிகமாக காணப்படும். மேலும் உடலுக்கு ஓய்வு தேவை என்பதை கண்கள் நமக்கு உணர்த்துகிறது. தற்போது உள்ள காலகட்டத்தில் அதிகம் தொலைபேசி மற்றும் கணினியை இரவு முழுவதும் பார்ப்பதால் கண்களின் கீழ் உள்ள தோல் அதிகம் பாதிக்கிறது. ஒரு நாளுக்கு எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். நீண்ட நேரம் வெயிலில் இருந்தாலும் கண்களுக்கு கீழ் இருக்கும் மெல்லிய தோல் பாதிக்கப்படுகிறது. மேலும் வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து கருவளையத்தை நீக்க முடியும்.

தேவைப்படும் பொருட்கள்

உருளைக்கிழங்கு

பாதாம் பொடி

கற்றாழை

செய்முறை

உருளைக்கிழங்கை துண்டு துண்டாக வெட்டி அரைத்து எடுத்து  அதனை ஜூஸ் போன்று எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த ஜூஸ் உடன் பாதாம் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இவைகளுடன் கற்றாழை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இதனை இரவில் தூங்கும் முன் கண்ணுக்கு கீழ் தடவி  விட்டு காலையில் முகம் கழுவினால் கருவளையம் குறையும். மேலும் இதனை ஒரு வாரம் பயன்படுத்தி வந்தால் போதும் கருவளையம் இல்லாமல் போய்விடும். உருளைக்கிழங்கு நல்ல ப்ளீச்சிங் தன்மையைக் கொண்டது. இதனால் கருவளையம் விரைவில் நீங்குகிறது. பாதாம் பாதாமில் விட்டமின் இ இருப்பதால் கருவளையத்தை நீக்குகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் கற்றலை நம் தோலுக்கு மிகவும் உதவுகிறது.

author avatar
Jeevitha