ஓபிஎஸ் மாநாடு! கத்தியுடன் வந்தவர் கைது!

0
213
ஓபிஎஸ் மாநாடு கத்தியுடன் வந்தவர் கைது
ஓபிஎஸ் மாநாடு கத்தியுடன் வந்தவர் கைது

ஓபிஎஸ் மாநாடு !கத்தியுடன் வந்தவர் கைது!

அதிமுகவில் பல குளறுபடி உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் திருச்சியில் முப்பெரும் விழா மாநாட்டை இன்று நடத்தினார். இந்நிலையில் மாநாடு  நடந்து கொண்டிருந்த போது மாநாட்டில் ஒருவர் கையில் கத்தியுடன் சுற்றி வந்துள்ளார்.

உடனே அவரை போலீசார் பிடித்து மேடைக்கு பின்புறம் அழைத்துச் சென்றனர்.இதனால் மாநாட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த கருத்தப்பாண்டி என்ற நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

விசாரணையின் போது அந்த நபர் கூறுகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சீனிவாசபேரியைச் சேர்ந்த கருத்தப்பாண்டி (57) என்பதும், இவர் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும் அந்த நபர் கூறுகையில் தற்காப்புக்காகவே கத்தியைக் வைத்திருந்ததாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார் .

மேலும் , ஓபிஎஸ் அணியில் விவசாய அணி தலைவராக இருந்து வருகிறார் என்பது குறிபிடத்தக்கது. மேலும்,  இதுகுறித்து அவரை பொன்மலை காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Previous articleசூடானில் தமிழர்கள் தவிப்பு! மத்திய அரசு தீவிர நடவடிக்கை
Next articleதமிழகத்தில் கொரோனா பாதிப்பு! அமைச்சர் சொன்ன பதில்!