மாஸ்க் போடலனா இனி மர்டர் தான்! நகராட்சியரின் அட்டூழியம்!

0
116
Thirsty relationship with mother! The thing that the DMK official did!
Thirsty relationship with mother! The thing that the DMK official did!

மாஸ்க் போடலனா இனி மர்டர் தான்! நகராட்சியரின் அட்டூழியம்!

கொரோனா தொற்றானாது இந்த வருடம் புதிதாக 2 வது அலையை உருவாக்கியுள்ளது.இந்நிலையில் தமிழக தேர்தலும் நடக்கஇருக்கிறது.அதனைத்தொடர்ந்து ஆளுங்கட்சி மற்றும் எதிர் கட்சியினர் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்குகளை சேகரித்து வருகிறது.அவர்கள் பரப்புரை ஆற்றும் போது பல தொண்டர்கள் கூடுகின்றனர்.தேர்தல் ஆணையம் கூறியது,பரப்புரையின் போது அனைவரும் முகக்கவசம் அணிந்தும்,சமூக இடைவெளி விட்டும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.இல்லையென்றால் அவர்களின் மீது வழக்கு தொடுக்கப்படும் என்னும் அறிவிப்பை வெளியிட்டது.

தேர்தல் தொடங்க இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் ஆங்காங்கே மக்கள் முன் பிரசாரம் செய்துவருகின்றனர்.அவர்கள் யாரும் முறையாக விதிமுறைகளை கடைபிடிப்பது இல்லை.அவர்கள் மீது எந்த வழக்கையும் தொடராமல் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு வேடிக்கை தான் பார்த்துக் கொண்டு வருகிறது.இந்த கொரோனா நோய் தொற்றும்  ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பாஜக வேட்பாளர் பொன் ராஜாகிருஷ்ணன் பரப்புரை ஆற்றினார்.அவர்களுடன் வந்த தொண்டர்கள் அவர் பின் காரில் வந்தனர்.சில நாட்களாக இந்த குளச்சல் பகுதியில் கொரோனா பரவல் காரணமாக நகராட்சியர் மாஸ்க் அணியதவர்களிடமிருந்து கட்டணம் வாங்கி வருகின்றார்.கட்டணம் அளிக்க மறுத்தால் அவர்களை பேருந்துகளிலிருந்து இறக்கி விட்டுவிடுகின்றனர்.அதே போல் பாஜக வினர் பரப்புரை முடித்து சென்றுக்கொண்டிருக்கும் போது அவரது தொண்டர்கள் அனைவரம் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

கார் ஓட்டும் ஓட்டுனர் முகக்கவசம் அணியவில்லை.அதற்காக அந்த காரை நகராட்சியர் நிருத்தினார்.அதன்பின் அவர்கள் கூறியது காரில் முன்னால் தலைவர் சென்றுக்கொண்டிருக்கிறார் நாங்கள் விரைந்து செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.அதன்பின் அந்த கார் செல்லும் போதே அந்த நகராட்சியர் காரின் கதவை பிடித்துள்ளார் அப்போது காரின் உள்ளிருந்த வேட்பாளர் காரை விட்டு கீழே விழுந்தார்.அந்த ஓட்டுனர் காரை நிறுத்தவில்லை என்றல் அவர் காரை விட்டு வெளியே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டிருக்கும்.அதன்பின் நகராட்சியருக்கும்,பாஜக வேட்பாளருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.அதன்பின் பாஜக வேட்பாளர் காவல் நிலையத்தில் நகராட்சியர் மீது புகார் அளித்தார்.அதற்கு எதிராக நகராட்சியரும் பாஜக வேட்பாளர் மீது புகார் அளித்தார்.

கொரோனா-வானது அதிக அளவு பரவி தான் வருகிறது.அதற்கென்று போலீசாரை விட அதிக அளவு கடுமையாக நடந்துக் கொள்வது அனைவரையும் கோபத்தை ஏற்படுத்துகிறது.