கை மற்றும் கால்களில் வெட்டுகாயங்களுடன் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை! வழக்கில் துப்பு துலக்கிய போலீசார்!

0
93
Medical college student commits suicide with cuts on arms and legs The cops who brushed off the case!
Medical college student commits suicide with cuts on arms and legs The cops who brushed off the case!

கை மற்றும் கால்களில் வெட்டுகாயங்களுடன் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை! வழக்கில்  துப்பு துலக்கிய போலீசார்!

புதுச்சேரி அருகே, மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தற்போது பல்வேறு தகவல்களை போலீசார் திரட்டி உள்ளனர். ஆந்திர மாநிலம் ராமச்சந்திராபுரத்தில், மேடக் அசோக் நகரைச் சேர்ந்தவர், சத்தியநாராயணா. இவர் ஒரு தொழிலதிபர். இவரது மகள் ஸ்பந்தனா. 30 வயதான இவர் புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூரை அடுத்த அரியூர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரி, விடுதியில் தங்கி தோல் மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சொந்த ஊருக்கு சென்றார். அப்போது அவருக்கு டெங்கு காய்ச்சல் வந்துள்ளது. அதன் பின் இதற்காக சிகிச்சை பெற்ற பின்னர் மீண்டும் புதுச்சேரி திரும்பினார். ஆனாலும் மிக சோர்வாக காணப்பட்ட, அவர் சம்பவத்தன்று விடுதியில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பிரேத பரிசோதனையின் போது அவரது கழுத்து, கை, கால்களில் வெட்டுக்காயம் இருப்பது தெரியவந்தது. இது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் புதுச்சேரிக்கு விரைந்து வந்தனர். தனது மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதைத் தொடர்ந்து அவர்களிடம் மேலும் விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு அந்தப் பெண்ணின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த விசாரணையின் போது பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றன. அதாவது அந்தப் பெண் தன்னுடன் படிக்கும் புதுச்சேரியைச் சேர்ந்த சக மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவரை விரும்புவதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுவதாகவும் பெற்றோரிடம் சொல்லி திருமணத்திற்கு அனுமதி கேட்டுள்ளார். ஆனால் மாணவியின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் தங்கள் மகளை வீட்டுக்கு அழைத்து சென்று, கவுன்சிலிங் மற்றும் அறிவுரை கொடுத்துள்ளனர். அதன் பின்னர் அவரை புதுச்சேரி அனுப்பி வைத்துள்ளனர். இதிலிருந்து அவர் மனமுடைந்து காணப்பட்டார். தனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்ள பெற்றோர் மறுத்ததை நினைத்து அவரை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை, என்ற வேதனையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இருந்த போதிலும் போலீசார் இந்த வழக்கில் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.