மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் தமிழிசை!

Photo of author

By Parthipan K

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் தமிழிசை!

Parthipan K

Updated on:

தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் திருமதி தமிழிசை சௌந்தரராஜனுக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்திய வண்ணம் இருக்கின்றனர். அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர்,பொதுமக்கள் என அனைவரும் தமிழிசைக்கு உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று பரவலாக வாழ்த்தி வருகின்றனர்.

மேலும் பல பிரமுகர்கள் நேரில் சந்தித்து தமிழிசையின் பணி சிறக்க தங்களின் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர், கட்சி சார்பற்ற நடுநிலைவாதிகள், கவிஞர்கள், இளைஞர்கள் அவரை மீம்ஸ் போட்டு கேலி செய்து வந்த சமூக வலைத்தள வாசிகளும் அவருடைய வளர்ச்சியை கண்டு பெருமிதம் கொண்டுள்ளனர்.

இது ஒருபுறமிருக்க தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனை நேற்று தரிசித்தார். அம்மனுக்கு ஆரத்தி எடுத்து வழிப்பட்டார், இதைத்தொடர்ந்து மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் அவர்களிடம் தன்னை ஆளுனராக ‌நியமிக்கப்பட்ட ஆணையை காண்பித்து ஆசியும் பெற்றார்.

ஆளுநர் பணியை மிகச் சிறப்பாக செய்து வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டுமென்று தமிழிசையை அனைத்து தரப்பினரும் வாழ்த்தி வருவது தமிழக பாஜகவிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் கடுமையான உழைத்தவர்களுக்கு சரியான அங்கீகாரம் பாரதிய ஜனதா கட்சியால் தரப்படுகிறது என்று தொண்டர்களும் பெருமையாக மற்றவர்களிடம் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்