மூளைச்சலவை செய்து கடத்தப்பட்ட இளம்பெண்களை 20 லட்சம் கொடுத்து மீட்டு வந்தேன்! திருமுருகன் ஜி வெளியிட்ட அதிர்ச்சி சம்பவம்.

0
139

தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திரு கே.சி.திருமுருகன் ஜி அவர்கள் அதிர்ச்சி தகவலை ஒன்றை தெரிவித்துள்ளார்!

மதுரையிலிருந்து இரண்டு இளம்பெண்கள் கடத்தப்பட்டதாகவும் அவர்களை ராயபுரத்தில் கடத்தி வைத்துக்கொண்டு பேரம் ‌பேசியதாகவும் அவர்களிடம் இருபது ‌லட்சம் ரூபாயை கொடுத்து இளம் பெண்களை மீட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இன்னொரு அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் இளம்பெண்கள் கருவுற்று இருந்தால் ஒரு தொகையையும் கருவுறாமல் இருந்தால் இன்னொரு தொகையும் பேரம் பேசப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இளம்பெண்களை மூளைச்சலவை செய்து அவர்களின் வாழ்க்கையை சீரழித்து எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றும் ஒரு கும்பல் தமிழகத்தில் தொழிலாகவே செய்து வருகின்றனர் எனவும் தமிழகம் முழுவதும் இதை ஒரு கும்பல் தான் செய்து வருகிறது என்றும் அவர்களுக்கு அந்த கும்பலின் தலைவர் முழுமையாக ஆதரவு அளிப்பதாகவும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரண்டு சமுதாயத்தினரிடையே மோதல் காரணமாக அம்பேத்கர் சிலை தாக்கப்பட்டது. சிலை தாக்கப்பட்டது முட்டாள்தனமான செயல் எனவும் இதை தாக்கப்படும்போது வெறித்தனமாக பார்த்தவர்கள் காரை கொளுத்தியவர்கள் மீது ஏன் வெறித்தனமாக பார்க்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

சிலை எதனால் தாக்கப்பட்டது என்று எவரும் கேள்வி கேட்கவில்லை எந்த ஊடகமும் வெளிக்காட்டவில்லை, அந்த நேரத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்கள் மட்டும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர், அதற்கு முன்னதாக காரை வழிமறித்து தீ யீட்டு கொளுத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் யாருடைய பார்வையும் திரும்பவில்லை அதை ஊடகமும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

அம்பேத்கர் ஒரு தேசியத் சின்னம்! ஒரு ஒரு குறிப்பிட்ட கும்பல் வக்கிர செயல்களையும் வன்முறை செயல்களையும் செய்துவிட்டு அம்பேத்கர் பின்னால் போய் ஒளிந்துகொண்டுள்ளனர் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K