மக்களுக்கு வானிலை மையம் எடுத்த எச்சரிக்கை!! தமிழகத்தில் இன்றும் நாளையும் இது அதிகமா?? 

Photo of author

By Amutha

மக்களுக்கு வானிலை மையம் எடுத்த எச்சரிக்கை!! தமிழகத்தில் இன்றும் நாளையும் இது அதிகமா?? 

Amutha

Meteorological department warned people!! Is it more today and tomorrow in Tamil Nadu??

மக்களுக்கு வானிலை மையம் எடுத்த எச்சரிக்கை!! தமிழகத்தில் இன்றும் நாளையும் இது அதிகமா?? 

தமிழ்நாட்டில் இன்றைய நாளையும் வெப்பம் அதிகரிப்பதால் இயல்பை விட  வெயில் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தற்போது லேசானது முதல் மிதமான மழை அனைத்து பகுதிகளிலும் பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தாலும் சில இடங்களில் வெயில் கொளுத்தி வருகிறது.

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் வெயிலும் சுட்டெரித்து வருகிறது. சில பகுதிகளில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியும் பதிவாகி உள்ளது.

ஏராளமான இடங்களில் மழை பெய்து வந்தாலும் சில மாவட்டங்களில் வெயிலானது இயல்பை விட இன்று அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் இன்றும், நாளையும் வெயில் அதிகரித்து காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் இன்றும், நாளையும் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பமானது அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சில இடங்களில் வெயில் சுட்டெரிக்கும் நிலையும் காணப்பட வாய்ப்புகள் உள்ளன.