வங்கிகளில் ரூ.5000 மாக உயர்த்தப்பட்ட மினிமம் பேலன்ஸ்..ATM பரிவர்த்தனையிலும் அதிகரிக்கப்பட்ட கட்டணம்!!

Photo of author

By Gayathri

இந்தியாவில் உள்ள சில முக்கிய வங்கிகள் தங்களுடைய விதிமுறைகள் புதிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளன. இந்த மாற்றங்களின் மூலம் வங்கி கணக்குகளில் பராமரிக்கப்பட்டு வரும் மினிமம் பேலன்ஸ் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ATM பரிவர்த்தனைகளிலும் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளன.

State Bank of India :-

✓ ஸ்டேட் பேங்க் உடைய மினிமம் பேலன்ஸ் ஆனது 3000 ரூபாயிலிருந்து தற்பொழுது 5000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

✓ இதேபோன்று ATM பரிவர்த்தனைகளில் மாதத்தின் முதல் 3 பரிவர்த்தனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அதன் பின் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு 20 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது. தற்பொழுது அது 25 ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Canara Bank :-

✓ வங்கி பயனர்களின் மினிமம் பேலன்ஸ் 1000 ரூபாயிலிருந்து 2500 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

✓ இந்த வங்கியும் தன்னுடைய ATM சேவை கட்டணத்தை 25 ரூபாயாக உயர்த்தி உள்ளது.

Punjab National Bank :-

✓ வங்கி பாயனர்களுக்கான மினிமம் பேலன்ஸ் 1000 ரூபாயிலிருந்து 3,500 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கின்றது.

✓ தன்னுடைய ATM சேவை கட்டணத்தை 25 ரூபாயாக உயர்த்தியுள்ளது.

குறிப்பு :-

இலவச ATM வரம்பை தற்பொழுது 5 முறை என இந்த வங்கிகள் உயர்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வங்கிகளில் தங்களுடைய கணக்குகளை பராமரிப்பவர்கள் புதிய விதிமுறைகளை அறிந்து கொண்டு அதன்படி செயல்பட வேண்டும் என இந்த வங்கிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.