பள்ளிகள் திறப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

0
65

திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது_

செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 9, 10, 11, 12, ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளும் தயாராக இருக்கின்றன மதுரையை அடுத்து திருச்சியிலும் மிக விரைவில் கலைஞரின் நூலகம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார்.