அதிசயம்.. சிகிச்சை இன்றி குணமாகும் புற்றுநோய்கள்!! எந்தவகை கேன்சர் என்று செக் பண்ணிக்கோங்க!!

Photo of author

By Divya

அதிசயம்.. சிகிச்சை இன்றி குணமாகும் புற்றுநோய்கள்!! எந்தவகை கேன்சர் என்று செக் பண்ணிக்கோங்க!!

Divya

உடலிலுள்ள திசுக்கள் மற்றும் உறுப்புகளை புற்றுநோய் செல்கள் சேதமைடய செய்கிறது.இந்த புற்றுநோய் பாதிப்பு ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் தொற்றுநோய் பாதிப்பு இல்லை.புற்றுநோய்களில் பல வகைகள் இருக்கின்றது.அவை உடலில் எந்த உறுப்பில் உருவாகிறது என்பதை பொறுத்து மாறுகிறது.

உதாரணத்திற்கு புற்றுநோய் செல்கள் நுரையீரலில் உருவானால் அவை நுரையீரல் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது.புற்றுநோயில் கல்லீரல் புற்றுநோய்,தொண்டை புற்றுநோய்,இரத்தப்புற்றுநோய்,கருப்பை புற்றுநோய்,குடல் புற்றுநோய்,வாய் புற்றுநோய்,மூளை புற்றுநோய் என்று பல வகைகள் இருக்கிறது.

புற்றுநோய் பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்து அதற்கான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் அபாயத்தில் இருந்து தப்பித்துவிடலாம்.

புற்றுநோய்க்கான பொது அறிகுறிகள்:

1)தீராத காய்ச்சல்
2)உடலில் அதிகப்படியான சோர்வு
3)அதிகப்படியான எடை இழப்பு
4)உணவு விழுங்குவதில் கடும் சிரமம்
5)கடுமையான வயிற்று வலி
6)சரும மாற்றம்
7)இடைவிடாத இருமல்

புற்றுநோய் காரணங்கள்:

1)அதிகப்படியான மது மற்றும் புகைப்பழக்கம்
2)மோசமான உணவுமுறை
3)உடல் நலக் கோளாறு

புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால் ஆரம்ப நிலையில் அதன் அறிகுறிகள் தென்படாது.அனைத்து புற்றுநோய்களும் பரம்பரைத் தன்மை கொண்டிருப்பதில்லை.சில வகை புற்றுநோய்களை சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்திவிடலாம்.

சிலவகை புற்றுநோய்கள் சிகிச்சை எதுவும் இன்றி தானாக குணமாகும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.தோல் புற்றுநோய்,கர்ப்பகால புற்றுநோய்,நியூரோபிளாஸ்டோமா என்ற குழந்தை பருவ புற்றுநோய் போன்ற சிலவகை புற்றுநோய்கள் உருவாகி தானாக மறைந்திருக்கிறது என்ற உண்மை நிகழ்வுகள் மருத்துவ வரலாற்றில் நடந்திருக்கிறது.

இருப்பினும் அனைவருக்கும் இதுபோன்ற புற்றுநோய் பாதிப்பு இயற்கையாக குணமாக என்றால் கேள்விக்குறி தான்.இன்றுவரை புற்றுநோய்க்கான ஆராய்ச்சிகள் நடந்துகொண்டு இருக்கிறது.இதுபோன்ற புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால் அவை குணமாகும் என்று காத்திருக்கலாம் சம்மந்தப்பட்ட மருத்துவரை அணுகி உடனடி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும்.