இந்த காயை தண்ணீரில் கலந்து தலையில் தடவுங்க!! நரைமுடி உடனே கருத்து விடும்!!

Photo of author

By Rupa

இந்த காயை தண்ணீரில் கலந்து தலையில் தடவுங்க!! நரைமுடி உடனே கருத்து விடும்!!

இளம் வயதில் சேர்ந்த பலருக்கும் நரைமுடி பிரச்சனை இருக்கும். இதனால் மருத்துவரை சந்தித்து பலவற்றை பின்பற்றி பார்த்திருப்பார். ஆனால் அது அனைத்தும் நிரந்தரமானதாக அவர்களுக்கு இருந்திருக்காது. மறுபுறம் வயது முதிர்வு நாள் பலருக்கும் வெள்ளை முடி வரும்.

அவ்வாறு இருப்பவர்கள் செயற்கையாக கிடைக்கும் டை வாங்கி உபயோகிப்பர். இதனால் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும். அவர் இருப்பவர்கள் இதனை ஒருமுறை செய்தால் போதும் உங்களது முடி கருமையாக மாறிவிடும்.

இதற்கு முக்கியமான பொருளாக பயன்படுவது காயவைத்த நெல்லிக்காய் வற்றல். இது பெரும்பாலும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

நெல்லிக்காய் என்றாலே முடி உதிர்தல் பிரச்சனைக்கு நல்ல ஒரு மருந்து. இதனை தொடர்ந்து நாம் பயன்படுத்தி வர முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.

முதலில் நெல்லிக்காயை வானிலில் போட்டு நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு வேறொரு பாத்திரத்தில் சுடு தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வறுத்தெடுத்த நெல்லிக்காயை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடி செய்து எடுத்துக் கொள்ளலாம்.

பின்பு அரைத்து வைத்திருக்கும் நெல்லிக்காய் பவுடரை சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிறிதளவு சலித்து வைத்துள்ள நெல்லிக்காய் பவுடரை எடுத்துக்கொண்டு அதில் இந்த சுடுதண்ணீரை ஊற்றி ஒரு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.

இதனை நரைமுடி இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். இதனை ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரம் தலையில் போட்டு ஊற விட வேண்டும்.

பின்பு ஷாம்பு போடாமல் வெறும் தண்ணீரில் தலையை அலசி எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வர நரை முடி பிரச்சனை தீரும்.