இந்த ஒரு பொடியை வெந்நீரில் கலந்து குடித்தால்.. GAS TROUBLE தொல்லை நீங்கும்!!

Photo of author

By Divya

இந்த ஒரு பொடியை வெந்நீரில் கலந்து குடித்தால்.. GAS TROUBLE தொல்லை நீங்கும்!!

Divya

Updated on:

Mix this powder in hot water and drink it.. GAS TROUBLE will get rid of!!

இன்று பலருக்கு வாயு பிரச்சனை இருக்கிறது.சாப்பிடும் உணவு ஆரோக்கியமற்று இருப்பதால் வயிற்றில் கெட்ட வாயுக்கள் அதிகளவு தேங்கி வயிற்றுவலி,வயிறு உப்பசம்,மலச்சிக்கல்,குடல் அழுகல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

எனவே வாயுத்தொல்லை நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை செய்து பலனடையுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)சீரகம் – 20 கிராம்
2)சுக்கு – ஒரு துண்டு
3)கருஞ்சீரகம் – 20 கிராம்
4)கொத்தமல்லி விதை – 25 கிராம்
5)ஏலக்காய் – ஒன்று
6)பெருங்காயம் – ஒரு கட்டி
7)புதினா இலை – பத்து
8)கறிவேப்பிலை – இரண்டு கொத்து

செய்முறை விளக்கம்:-

வாயுத் தொல்லையை போக்கும் அன்னப்பொடி எப்படி செய்வது என்பது குறித்து கீழே விளக்கப்பட்டிருக்கிறது.

*முதலில் 20 கிராம் சீகரத்தை வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து வறுக்கவும்.அதோல் மற்ற அனைத்து பொருட்களையும் வாணலியில் போட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும்.சுக்கை மட்டும் தோல் நீக்கிவிட்டு வறுக்க வேண்டும்.

*பிறகு அனைத்து பொருட்களையும் தட்டில் கொட்டி நன்கு ஆறவிடவும்.பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்களை போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து ஒரு தட்டில் கொட்டி நன்கு ஆறவிடவும்.

*பிறகு இதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் கொட்டி ஸ்டோர் செய்து கொள்ளவும்.பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சில நிமிடங்களுக்கு சூடாக்கவும்.

*அடுத்து அரைத்த அன்னப்பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.5 நிமிடங்களுக்கு இதை ஆறவிட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் வாயுத் தொல்லை முழுமையாக நீங்கிவிடும்.

வாயுத் தொல்லையை போக்கும் மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)மோர் – ஒரு கப்
2)பெருங்காயத் தூள் – 1/2 தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

*முதலில் அரை கப் தயிரை மிக்ஸி ஜாரில் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி மோர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

*பிறகு அடுப்பில் வாணலி வைத்து 1/2 தேக்கரண்டி பெருங்காயத் தூள் சேர்த்து லேசாக வறுத்து ஆறவிடவும்.

*பெருங்காயம் ஆறியப் பிறகு வறுத்த பெருங்காயத் தூள் சேர்த்து கலக்கி குடித்தால் வாயுத் தொல்லை கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

*முதலில் ஒரு கிளாஸில் தண்ணீர் நிரப்பி ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து ஒரு இரவு முழுவதும் ஊறவிடவும்.

*மறுநாள் இந்த சீரக நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை அனைத்தும் எளிதில் நீங்கிவிடும்.