மோடி ஆட்சி இனி இல்லை! சிந்திக்க வைக்கும் பேட்டி! 

0
88
Modi regime is no more! Thought provoking interview!
Modi regime is no more! Thought provoking interview!

மோடி ஆட்சி இனி இல்லை! சிந்திக்க வைக்கும் பேட்டி!

பீகார் மாநில முதல் மந்திரி ஆக எட்டாவது முறையாக நித்திஷ் குமார் நேற்று பதவியேற்றார் .மேலும் பதவி ஏற்பதற்கு பிறகு கவர்னர் மாளிகையில் பத்திரிக்கையாளர்களுக்கு நிதிஷ்குமார் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இருக்காது என்று சொன்னவர்கள் நிதீஷ்குமார் இப்போது எதிர்க்கட்சியில் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும் என கூறினார் . மேலும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற எதிர்கட்சிகள் ஒன்று பட வேண்டும் எனவும் கூறினார்.

மேலும் 2020 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் சேர்ந்து போட்டியிட்டபோது எங்களின் கட்சியின் பலன் குறைந்தது என்றும் குறிப்பிட்டார். மேலும் 2015 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதாதளத்துடன் சேர்ந்து போட்டியிட்டபோது எங்கள்பலம்  அதிகரித்தது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் கடந்த இரண்டரை மாதங்களில் நடந்த அரசியல் நிகழ்வுகள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்றும் உரிய நேரத்தில் உண்மைகளை அமல்படுத்துவேன் என்றும் கூறினார். விரைவில் சட்டசபை கூட்டப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் 2014 ஆம் ஆண்டு பதவிக்கு  வந்தவர் மோடி இவர் 2024 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார் எனவும் கடுமையாக விமர்சித்து பேசினார்.

author avatar
Parthipan K