சமீபத்தில் மிகவும் ட்ரெண்டான ஒன்றாக ஜூப்லி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதழ் தற்பொழுது பல்வேறு அங்கீகரிக்கப்படாத செயலிகள் இருப்பதாகவும் அவற்றில் செல்பி எடுத்த மாற்றும் பொழுது நம்முடைய புகைப்படங்களை பதிவேற்றுவதன் மூலம் வங்கி கணக்கில் இருக்கக்கூடிய பணத்தை மோசடி நபர்கள் திருடக்கூடும் என மாநில சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடத்திருக்கின்றனர்.
இது குறித்த தமிழ்நாடு மாநில சைவ கலை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :-
சமீபத்தில் புகைப்படங்களை ஜூப்லி அதாவது கார்ட்டூன் போல மாற்றக்கூடிய செயற்கை நுண்ணறிவு கலையினுடைய பயன்பாடு பொதுமக்களிடையே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இது போன்ற செயல்களில் பயனர்கள் புகைப்படங்கள் அல்லது தங்களுடைய செல்விகளை பதிவேற்றம் செய்யும் பொழுது பயனர்களுக்கு அவர்கள் நினைக்கக்கூடிய மற்றும் அவர்களை மகிழ்விக்க கூடிய முக அமைப்புகளை அனிமேஷன் செய்த இந்த செயலிகள் வழங்குகின்றன. இதனால் பலரும் இது போன்ற செயலிகளை தங்களுடைய செல்போன்களில் பதிவிறக்கம் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த செயலியை பயன்படுத்தும் நபர்களுடைய தனிப்பட்ட பயோமெட்ரிக் தரவை ஏஐ செயலிகளிடம் செல்போன் வழங்குகிறது. இவ்வாறு நடக்கும் பொழுது பதிவேற்றம் செய்யப்படக்கூடிய புகைப்படங்கள் பின்னணிகளில் பகுப்பாய்வு செய்து சேமித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு நாம் பதிவேற்றம் செய்யக்கூடிய புகைப்படங்கள் மற்றும் அதன் மூலம் பதிவேற்றமாக கூடிய தரவுகளை நீக்குவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. இதனால் அங்கீகரிக்கப்படாத செயலிகள் , அதிகாரப்பூர்வமற்ற அல்லது பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய செயல்கள் மூலம் தனிநபர் அவருடைய மொத்த தரவுகளையும் இலக்க நேரிடும். இவை சைபர் குற்றங்களுக்கு உள்ளாவதற்கான அபாயம் கூட ஏற்படுத்தும் என சைபர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, சைபர் மோசடிக்காரர்கள் இந்த ஜூப்லி கதாபாத்திரங்களை பயன்படுத்தி இவற்றில் பதிவிறக்க இணைப்புகளை அனுப்பி அதனை கிளிக் செய்வதன் மூலம் கூட தனிப்பட்ட தரவு வங்கி தகவல்கள் போன்றவற்றை பெற்று பயனரின் உடைய வங்கி கணக்கில் உள்ள பணத்தை முழுவதுமாக இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.