முன்னூறு நோய்களுக்கு மருந்து முருங்கை இலை!! இப்படி சாப்பிட்டால் 100% பலன் கிடைக்கும்!!

Photo of author

By Divya

முன்னூறு நோய்களுக்கு மருந்து முருங்கை இலை!! இப்படி சாப்பிட்டால் 100% பலன் கிடைக்கும்!!

Divya

முருங்கை மரத்தில் இருக்கும் இலை,பூ,காய்,பட்டை,பிசின் அனைத்தும் எக்கச்சக்க மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இதில் முருங்கை கீரையில் இரும்பு,வைட்டமின்கள்,பொட்டாசியம்,கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.

முருங்கை கீரை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.கண் பார்வை திறனை அதிகப்படுத்த உதவுகிறது.இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.மன அழுத்தத்தை பெரிதும் குறைக்க உதவுகிறது.உடல் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

தேவைப்படும் பொருட்கள்:-

1)முருங்கை கீரை – ஒரு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

ஒரு கைப்பிடி முருங்கை கீரையை நன்றாக நிழலில் நன்றாக காயவைத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு கெட்டு போகாத மாதிரி ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.ஒரு நிமிடம் கழித்து முருங்கை கீரை பொடி தேவையான அளவு அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த முருங்கை கீரை பானத்தை கிளாஸிற்கு ஊற்றி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை கீரை பொடி – இரண்டு தேக்கரண்டி
2)மிளகு – இரண்டு
3)பூண்டு பல் – இரண்டு
4)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
5)சீரகம் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முருங்கை கீரையை உலர்த்தி பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து இரண்டு மிளகு,இரண்டு வெள்ளைப்பூண்டு பல் மற்றும் ஒரு தேக்கரண்டி சீரகத்தை உரலில் போட்டு தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு முருங்கை கீரை பொடியை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் இடித்து வைத்துள்ள கலவையை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தில் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து குடித்தால் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும்.