கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று கூறிவிட்டு அப்பன் முருகனிடம் அருள்வாங்கிய நாத்திகவாதி..!!

Photo of author

By Jayachandiran

கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று கூறிவிட்டு அப்பன் முருகனிடம் அருள்வாங்கிய நாத்திகவாதி..!!

Jayachandiran

கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று கூறிவிட்டு அப்பன் முருகனிடம் அருள்வாங்கிய நாத்திகவாதி..!!

“சொல் ஒன்று செயல் ஒன்று’ பகுத்தறிவு என்கிற நாத்திகத்தை பேசும் இயக்கம் தமிழ்நாட்டில் பல உண்டு. அதில் அடிக்கடி டிவி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் ஈவேராவின் பகுத்தறிவுக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர். தொடர்ந்து கடவுள் இல்லை என்று பேசி வந்த இவருக்கு முருகன் கோயில் முக்தி வந்துள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சேலம் ஆர்ஆர் பிரியாணி ஓனர் தமிழ்ச்செல்வனுடன் கோயிலுக்கு சென்று பக்தியுடன் வணங்கியுள்ளார். பின்னர் மாலை கழுத்துடன் கோயிலுக்கு வந்த போது தமிழ்ச்செல்வன் இது குறித்து பேசினார்.

வேலு பிரபாகரன் கடவுள் மறுப்பு கொள்கை உடையவர். கடவுளை மறுப்பவர் அல்ல, சிலரின் கருத்துகளுக்கு எதிரானவர் மட்டுமே சாமி இருந்தால் மகிழ்ச்சி என்று சொல்வார் அவ்வளவுதான். அனைவரையும் கோயிலுக்கு அழைத்துச் சென்று பூஜை நடத்தி வழிபட்டது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்று கூறினார். ஐயர் கொடுத்த பிரசாதத்தை வாங்கிக் கொண்டதாக தமிழ்ச்செல்வன் கூறினார்.

இது சம்பந்தமாக வேலு பிரபாகரன் பேசியதாவது: இதை ஒரு நல்ல வாய்ப்பாக நினைக்கிறேன், இங்கு பல லட்சக்கணக்கான மக்களின் எண்ணமும், வேண்டுதலுடன் இருக்கின்றனர். அவர்களுடன் நான் சில மணி நேரம் இங்கேயே இருந்தேன். இந்த வாய்ப்பை கொடுத்த மனிதநேய பண்பாளருக்கு நன்றி தெரிவித்தார்.