ஏழு மாத கர்ப்பத்திற்கு என் தந்தைதான் காரணம்! கண்ணீர் மல்க பெற்ற மகளின் குமுறல்!

0
97
My father was responsible for the seven month pregnancy! The murmur of the daughter who received the tears!
My father was responsible for the seven month pregnancy! The murmur of the daughter who received the tears!

ஏழு மாத கர்ப்பத்திற்கு என் தந்தைதான் காரணம்! கண்ணீர் மல்க பெற்ற மகளின் குமுறல்!

பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் ஆங்காங்கே நடந்த வண்ணமாக தான் உள்ளது. உற்றார் உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் என பலர் பெண்பிள்ளைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக பல வழக்குகளை சந்தித்து வருகிறோம். பெண் பிள்ளைகளை யாரையும் நம்பி விட்டு செல்ல முடியாத இந்த காலகட்டத்தில் பெற்றோரை மட்டுமே நம்ப வேண்டியுள்ளது.

ஆனால் தற்பொழுது பெற்றவர்களையே நம்ப முடியாத சூழல் உருவாகி வருகிறது. அதைப்போல் தான் தற்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தில் மனதை பதற வைக்கும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி என்ற கிராமத்தில் சேகர் மற்றும் அவரது மனைவி அவரது மகள் என வாழ்ந்து வந்தனர். திடீரென்று அவரது மனைவி உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். பின்பு சேகர் மற்றும் அவரது மகள் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவர் வசித்து வந்த நிலையில் சேகர் தான் பெற்ற மகளிடமே தகாத முறையில் நடந்துள்ளார்.

மேலும் தான் பெற்ற பிள்ளைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பாலியல் தொல்லை கொடுத்த இதன் காரணமாக தற்போது அந்த சிறுமி 7 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். தந்தையே கர்ப்பமாக உள்ள தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே இருந்து மருத்துவர்கள் சந்தேகித்து அந்த பெண்ணிடம் விசாரித்துள்ளனர். அந்தப் பெண்ணோ நான் கர்ப்பமாக இருப்பதற்கு என் தந்தைதான் காரணம். எனது தாய் இறந்த பிறகு என் தந்தை என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்.

மேலும் என் தந்தை தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை அளித்தார் என இவ்வாறு வாக்குமூலம் கொடுத்தது. பெண்ணின் வாக்குமூலத்தை கேட்ட மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்து மகளிர் காவல்நிலையத்திற்கு இது குறித்து தகவல் அளித்துள்ளனர். பின்பு இந்த சம்பவம் குறித்து மகளிர் காவல் அதிகாரி விசாரணை மேற்கொண்டார். பின்பு அந்தப் பெண்ணின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தற்பொழுது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தை என்ற செய்தி தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.