தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் பசி துரை காலமானார்..!! 

0
144
National award winning director Pasi Durai passes away..!!
National award winning director Pasi Durai passes away..!!

தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் பசி துரை காலமானார்..!!

சிவாஜி, ரஜினி மற்றும் கமல் என தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களை இயக்கி பிரபலமான இயக்குனர் பசி துரை உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு திரைபிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இவரின் இயற்பெயர் செல்லத்துரை இவருக்கு மனைவி, 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 1979 ஆம் ஆண்டு இவர் இயக்கிய பசி என்ற படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு, சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் வென்றது. அந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் அனைவரும் இவரை பசி துரை என்றே அழைக்க தொடங்கினார்கள்.

பசி படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய அவளும் பெண் தானே என்ற படமும் தேசிய விருதை வென்றது. இதுதவிர தமிழ்நாடு அரசின் சிறந்த இயக்குனர் விருது, கலைமாமணி விருதுகள் என ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தி இவர் எடுத்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 40க்கும் மேற்பட்ட வெற்றி படங்களை துரை இயக்கியுள்ளார். அதிலும் குறிப்பாக தமிழில் சிவாஜி நடிப்பில் வெளியான கிளிஞ்சல்கள், கமலின் நீயா, ரஜினியின் ஆயிரம் ஜென்மங்கள் போன்ற படங்கள் இன்றளவும் இவரின் பெயர் சொல்லும்.

தற்போது 92 வயதான பசி துரை உடல்நலக்குறைவு காரணமாக இன்று கொடைக்கானலில் காலமானார். அவரின் உடல் சென்னையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. இதனையடுத்து நாளை காலை 10.30 மணியளவில் பெசண்ட் நகர் மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. இவரின் மறைவிற்கு திரையுலகில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.