இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு தூதரக ரீதியாக எச்சரிக்கை விடுக்க வேண்டும்! டி ஆர் பாலு  வேண்டுகோள்!

இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு தூதரக ரீதியாக எச்சரிக்கை விடுக்க வேண்டும்! டி ஆர் பாலு  வேண்டுகோள்!

தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை அபகரித்து கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு மத்திய அரசு எந்த விதத்திலும் துணை போகக்கூடாது என்றும், இலங்கை கடற்படையினர் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசுக்கு தூதரக ரீதியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் திமுக பொருளாளர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி திமுக பொருளாளர் டி ஆர் பாலு இன்று விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளார்: ‘கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த … Read more

நடப்பு நிதியாண்டின் ஜிடிபி அறிவிப்பு – நிதி அமைச்சர் தகவல்!

நடப்பு நிதியாண்டின் ஜிடிபி அறிவிப்பு - நிதி அமைச்சர் தகவல்!

கொரோனா தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வந்தது. இதனால் இந்திய அளவில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை கண்டது என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் உற்பத்தியின் அளவு குறைந்துள்ளது. அதை தொடர்ந்து அரசு அறிவித்த சில தளர்வுகளின் காரணத்தினால் உள்நாட்டு உற்பத்தி விகிதம் தற்போது சீராக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் பண்டிகை காலகட்டங்களில் பொருளாதாரம் சீரான வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு இயல்பு நிலைக்கு விரைவில் … Read more

ஊழலுக்கு எதிராய் அனைவரும் ஒன்றிணைவோம் – பிரதமர் மோடி!

ஊழலுக்கு எதிராய் அனைவரும் ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி!

ஊழலுக்கு எதிராய் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கண்காணிப்பு, ஊழல் தடுப்பு மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்ட பிரதமர் மோடி மக்களிடம் ஊழலுக்கு எதிராக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை திட்டவட்டமாக கூறியுள்ளார்.  ஊழல், பயங்கரவாத செயல், பொருளாதாரக் குற்றம், அனைத்தும் பண மோசடி, ஊழல் காரணமாகவே நடைபெறுகிறது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். அதுமட்டுமன்றி ஊழல் என்பது தலைமுறை தலைமுறையாக நடந்ததால் நாடே வெறுமையாக்கி கிடந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் ஊழல் … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு – புதுச்சேரி முதலமைச்சர்!

அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு - புதுச்சேரி முதலமைச்சர்!

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு. இந்த அறிவிப்பால் அங்கிருக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்களுக்கு தங்களின் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்கள் கூறியதாவது : “நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான … Read more

அடுத்தகட்ட ஊரடங்கை அறிவித்தது மத்திய அரசு…! நோய்தொற்று அதிகமானதால் நடவடிக்கை…!

அடுத்தகட்ட ஊரடங்கை அறிவித்தது மத்திய அரசு...! நோய்தொற்று அதிகமானதால் நடவடிக்கை...!

இந்தியா முழுவதும் வரும் நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். என்று மத்திய அரசு தெரிவித்திருக்கின்றது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பரவல் அதிகமாகி வருகின்றது. உலக அளவில் இதில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஊரடங்கு தளர்வுகள் சம்பந்தமாக செப்டம்பர் 30ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட கட்டுப்பாடுகள் வரும் நவம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை … Read more

மக்களே முன்னெச்சரிக்கையாக இருங்கள்! இந்த வங்கியின் 50 கிளையை மூட போறாங்களாம்! ஏடிஎம் மையங்கள் குறைவதற்கு வாய்ப்பு இருக்காம்!

மக்களே முன்னெச்சரிக்கையாக இருங்கள்! இந்த வங்கியின் 50 கிளையை மூட போறாங்களாம்! ஏடிஎம் மையங்கள் குறைவதற்கு வாய்ப்பு இருக்காம்!

Yes Bank- இன் 50 கிளைகளை மூட உள்ளதாக புதியதாக தலைமை ஏற்ற நிர்வாக இயக்குனர் பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார். 2021 ஆம் நிதி ஆண்டில் தனது ஒட்டுமொத்த வலையமைப்பை குறைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அதனால் 50 கிளைகளை மூட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் புதிதாக எந்த ஒரு திறப்புகளும் இருக்காது என்றும் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வணிக நிர்வாக பொறுப்பேற்ற குமார் செப்டம்பர் காலாண்டில் வங்கியின் இயக்க செலவுகளை குறைக்க வேண்டிய சூழ் நிலையில் … Read more

பள்ளிகள் தீபாவளிக்குப் பின் திறக்கப்படும்! அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

பள்ளிகள் தீபாவளிக்குப் பின் திறக்கப்படும்! அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

குரானா பொது முடக்கம் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. தற்போது பள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் சில மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது குஜராத்தில் தீபாவளி விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்க போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மாநில கல்வி அமைச்சர் பூபேந்திர சிங் சுதாசமா கூறுகையில், “ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கமான … Read more

கடும் வெயிலில் மரக்கன்று விற்ற முதியவர் !! சமூக ஆர்வலர்கள் செய்த செயலால் குவியும் பாராட்டுக்கள் !!

கடும் வெயிலில் மரக்கன்று விற்ற முதியவர் !! சமூக ஆர்வலர்கள் செய்த செயலால் குவியும் பாராட்டுக்கள் !!

ரேவனா சிட்டப்பா என்பவர் கர்நாடகாவில் கனகபுரம் சாலையில் உள்ள சரக்கு சிக்னல் அருகே  தனது செடிகளை 10 முதல் 30 ரூபாய்க்கு கடும் வெயிலில் ஒரு குடையுடன் விற்று வந்துள்ளார். இதனைக் கண்ட ஐ.எம்.சுபம் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த செயல் குறித்து பதிவிட்டுள்ளார்.நேற்று பகிரப்பட்ட இந்த புகைப்படத்தை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டனர் .அதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். https://twitter.com/shubham_jain999/status/1320619850423660545?s=20 இந்த புகைப்படத்தை அஸ்வினி எம் ஸ்ரீதர் என்பவர் 10:45 … Read more

இந்தியாவில் முதல்முறையாக யூடியூப் நேரலை வழக்கு விசாரணை ஒளிபரப்பு !!

இந்தியாவில் முதல்முறையாக யூடியூப் நேரலை வழக்கு விசாரணை ஒளிபரப்பு !!

  இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் முதல் முறையாக யூடியூப் நேரலை வழக்கு விசாரணை ஒளிபரப்பு நடத்தப்பட்டது. இதுநாள் வரை உயர் நீதிமன்ற விசாரணைகள் குறித்து தகவல் அறிவது கடினமாக ஒன்றாக இருந்து வந்த நிலையில், இந்தியாவிலேயே முதன்முறையாக வழக்கு விசாரணை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் யூடியூப் மூலமாக நேரலை ஒளிபரப்பு முறையை குஜராத் உயர்நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று தலைமை நீதிபதி விக்ரம்நாத் அமர்வில் நடத்தப்பட்ட வழக்கு விசாரணையில், முதல்முறையாக யூடியூப் சேனலில் ஒளிபரப்பு … Read more

இந்த தேதியில் பள்ளிகளை திறக்க மாநில அரசு உத்தரவு !!

இந்த தேதியில் பள்ளிகளை திறக்க மாநில அரசு உத்தரவு !!

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவத் தொடங்கி, தற்போது வரை அதன் தாக்கம் நீடித்து வருகின்றது. இதனால் பள்ளி ,கல்லூரிகள், பல்கலைக்கழகம் ஆகிய அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், மாணவர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே கல்வி கற்கும் முறையை மத்திய மாநில அரசு மேற்கொண்டது. ஆனால், தற்பொழுது மாநிலங்களில் கொரோனா நோய் கட்டுக்குள் இருப்பதனால், எந்த ஒரு மாநிலத்திலும் முழுமையான கல்வி செயல்பாடுகள் குறித்த அறிவிப்புகளை அந்த மாநில அரசு வெளியிட மறுத்தது . … Read more