தீராத பல் வலியை நொடியில் போக்க வேண்டுமா? இதோ அற்புதமான 10 இயற்கை மருத்துவ முறைகள்!

0
111

தீராத பல் வலியை நொடியில் போக்க வேண்டுமா? இதோ அற்புதமான 10 இயற்கை மருத்துவ முறைகள்!

நம்மில் சிலருக்கும் திடீரென அடிக்கடி பல்வலி வருவதுண்டு.இதற்கு முதன்மை காரணமாக சொத்தை பல் பிரச்சனை இருக்கும்.இப்படி சொத்தை பல் இருப்பவர்களுக்கு பல்வலி ஏற்படுகிறது.அதை எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து பார்ப்போம்.

நம் பற்களின் இரண்டு பாதுகாக்கும் கவசங்கள் இனாமல், டென்டின் உள்ளது. இரண்டையும் தாண்டி இந்த சொத்தை ஆழமாக பரவும் போது பல் வலி உண்டாகிறது. இவ்வாறு உண்டாகும் இந்த பல் வலியை எளிதில் சரி செய்ய கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 10 முறைகளை பின்பற்றினால் போதும். தற்போது அவற்றில் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

1. தினமும் மிளகுத் தூளுடன் உப்பு சேர்த்துப் பல் விளக்கி வர சொத்தைப் பல், பல்வலி, ஈறு வலி மற்றும் வாய் துர்நாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகள் இல்லாமல் போகும்.

2. ஈறுகளில் வீக்கம் மற்றும் பல் வலிக்கு பப்பாளிப் பாலை அந்த வீக்கத்தில் தடவி, இலேசாகத் தேய்க்க உள்ளிருந்த கெட்டநீர் வெளியேறி அதனால் உண்டான வலியும் வீக்கமும் போகும்.

3. பல் வலி உள்ளவர்கள் இந்த பல்வலியின் போது பல் துலக்கியவுடன், ஒரு நெல்லிக்காயை நன்கு மென்று தின்னவும்.இதன் பிறகு அந்த வலி காணாமல் போய் விடும்.

4. பிரம்ம தண்டு இலையை எரித்து சாம்பலாக்கி அதைக் கொண்டு தினமும் பல் தேய்க்க, பல் ஆட்டம், பல் சொத்தை, பல் கறை மற்றும் பல்லில் இரத்தம் வடிதல் உள்ளிட்ட பிரச்சனைகள் எல்லாமே தீரும்.

5. ஆலமரப் பாலை பற்கள் மீது தடவினால் பல் ஆட்டம் நிற்கும்.ஆயில் புல்லிங் தினம் செய்ய பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வைரஸ், பாக்டீரியா உள்ளிட்டவைகள் தொற்றிலிருந்தும் விடுபடலாம்.

6. கோவைப்பழம் அடிக்கடி சாப்பிட்டால் பல் பலப்படும். நந்தியாவட்டை வேரை வாயிலிட்டு மென்று துப்பவும்.ஒமத்தை நீர்விட்டு அரைத்து களி போல் கிளறி இளஞ்சூட்டில் பற்றுப்போடவும். இப்படி செய்து வந்தால் பல்வலி இல்லாமல் போகும்.

7. ஒரு பல் பூண்டை நசுக்கி, வலி உள்ள இடத்தில் வைக்கலாம். இதைப்போல கிராம்பை நசுக்கியும் பல்வலி உள்ள இடத்தில் வைக்கலாம்.இதனால் பல்வலி குறையும்.

8. வாகை மரப் பட்டையை எரித்துப் பொடி செய்து கொள்ள வேண்டும்.பின்னர் தினமும் இதைக்கொண்டு பல் துலக்க ஈறு நோய் மற்றும் பல் வலி குணமாகும்.கருவேலம் பட்டைப் பொடியால் பல் துலக்ககினாலும் பல் சம்பந்தமான பிரச்சனைகள் சரி ஆகும்.

9. மாசிக்காயைத் தூளாக்கி, நீரில் கொதிக்க வைத்து தினமும் கொப்பளிக்க ஈறு பலமடையும்.அசோக மரப் பட்டைப் பொடியுடன் உப்பு சேர்த்து பல் விளக்கவும். இப்படி செய்து வந்தால் பல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

10. கடுகை பொடி செய்து பல் வலிக்கும் இடத்தில் பற்று போடவும். வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவவும்.இப்படி செய்தால் உடனடியாக பல்வலி குணமாகும்.