ஆள் அடையாளம் தெரியாமல் பள்ளி பருவத்தில் நயன்தாரா!!

Photo of author

By Parthipan K

ஆள் அடையாளம் தெரியாமல் பள்ளி பருவத்தில் நயன்தாரா!!

Parthipan K

ஆள் அடையாளம் தெரியாமல் பள்ளி பருவத்தில் நயன்தாரா!!

தென்னிந்தியாவின் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நயன்தாரா. நடிகர்களுக்கு இணையாக சம்பள பெரும் நடிகையாக திகழ்கிறார். இவர் சரத்குமார் நடிப்பில் 2005 ஆம் ஆண்டில் வெளியான ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்.

இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு 4  மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழைந்தைகள் பிறந்ததாக தெரிவித்திருந்தார். பல முன்னணி நடிகர்களுக்கு, ஜோடியாக, நடித்து குறுகிய காலத்தில் பிரபல நடிகையாக மாறிய நயன்தாரா தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ஜவான்’ படத்தில் நடித்தும் வருகிறார்.

நயன்தாராவின் பள்ளி பருவ புகைப்படம் ஆனது ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த புகைப்படத்தில் நயன்தாரா ஆள் அடையாளம் தெரியாது போல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.